யாரைக் கேட்டாலும் ஏதோ ஒரு தொந்தரவு இருப்பதைத்தான் சொல்லி புலம்புகிறார்களே தவிர, நல்லா ஆரோக்கியமாக இருக்கிறேன் என யாருமே தானாக முன்வந்து சொல்வதில்லை. இந்த தொந்தரவுகளை எல்லாம் சமாளிக்க வேண்டுமென்றால் எப்பொழுதாவது சில வழிமுறைகளைப் பின்பற்றினால் போதாது. தினமும் சில வழிமுறைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும். இப்படி பின்பற்றுவதன் மூலம் திடீரென ஏற்படும் இதய நோய்கள், நீரிழிவுநோய், கேன்சர் போன்றவற்றிலிருந்து ஓரளவு நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 1. சரிவிகித உணவு: சும்மா எப்பொழுது பார்த்தாலும் சாப்பாடு, தோசை, இட்லி என்று சாப்பிடாமல், உணவில் காய்கறிகள், பழங்கள், திணைவகைகள், கொட்டை வகைகள் என எல்லாமும் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. குறைந்தது 400 கிராம் பழங்கள் காய்கறிகளை நம் தினசரி உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.