Night Shift: இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களே உஷார்! இப்படியான உடல்நலப்பிரச்னை வரலாம்! - Tamil News | Health Problems of Women Working in Night Shift health tips in tamil | TV9 Tamil

Night Shift: இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களே உஷார்! இப்படியான உடல்நலப்பிரச்னை வரலாம்!

Published: 

16 Sep 2024 08:42 AM

Night Shift Working Women: மற்ற பெண்களை விட இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்‌ உள்ளது என JAMA இதழில் வெளியிட்டுள்ளது. தனது அன்றாட செயல்களில் இருந்து மாறுபடுவதால் உடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கி பின்‌ புற்றுநோய் கட்டிகளை உருவாக்கிறது.

Night Shift: இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களே உஷார்! இப்படியான உடல்நலப்பிரச்னை வரலாம்!

கோப்புப்‌படம் (Photo Credit: Jay Yuno/E+/Getty Images)

Follow Us On

இரவு‌ நேர பணியின் ஆபத்து: இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் பணி புரிய தொடங்கி விட்டனர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே வேலை பார்த்து வந்த இரவு நேர பணிகளில் இப்பொழுதும் பெண்களும் பணி புரிய தொடங்கி விட்டனர். ஆனால் இரவு பகுதி நேரத்தில் வேலை செய்யும் பெண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மற்ற பெண்களை விட இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

மற்ற பெண்களை விட இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்‌ உள்ளது என JAMA (Journal of the American Medical Association) இதழில் வெளியிட்டுள்ளது. தனது அன்றாட செயல்களில் இருந்து மாறுபடுவதால் உடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கி பின்‌ புற்றுநோய் கட்டிகளை உருவாக்கிறது.

இரவு நேரங்களில் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் மெலடோனின் முதன்மையானது. இரவு உறக்கத்தின் போது உடலில் உற்பத்தியாகும் ஒரு வகை ஹார்மோன் தான் மெலடோனின், ஆனால் இரவில் தூங்காமல் இருப்பதால் இந்த ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்த ஹார்மோன் உடலில் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. எனவே இரவில் இந்த ஹார்மோன் உடலில் உற்பத்தியாவது மிகவும் அவசியம். இரவில் சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

Also read: Sleeping Position: குப்புற படுத்து தூங்கினால் நல்லதா..? எப்படி தூங்குவது நன்மை தரும்?

காலையில் வேலை செய்பவர்களை விட இரவில் வேலை செய்பவர்கள் ஜங்க் ஃபுட் மற்றும் குளிர் பானங்கள் அதிகம் உட்கொள்கிறார்கள். பகலில் மக்கள் பழங்கள், சாலடுகள் மற்றும் முளைக்கட்டிய பயிர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள். ஆனால் இரவில் வேலை செய்பவர்கள் ஸ்நாக்ஸ், பீட்சா, பர்கர் போன்றவற்றை உட்கொள்கிறார்கள். இது உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் பணிபுரியும் ஆண்களுக்கும் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் பணி பெண்களுக்கு 41% தோல் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் 32% மார்பக புற்றுநோயும் 38% குடல் புற்று நோயும் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரவு நேரங்களில் வேலை செய்யும் போது, ​​மார்பக புற்றுநோய்க்கான ஆபத்து 3.3 சதவீதம் அதிகரிக்கிறது. குறிப்பாக இரவு நேரம் வேலை செய்யும் பெண் செவிலியர்களை, இரவு நேரம் வேலை செய்யாத சக ஊழியர்களுடன் ஒப்பிடும்போது, ​​இரவு நேரத்தில் பணிபுரியும் பெண் செவிலியர்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் 58 சதவீதமும் குடல் புற்றுநோயின் அபாயம் 35 சதவீதமும் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயம் 28 சதவீதமும் அதிகமுள்ளது. அதிக ஊதியம், குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு உள்ளிட்ட பல காரணங்களுக்காக பெண்கள் இரவு நேர வேலையை தேர்வு செய்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில், இரவுப் பணி புரியும் பெண்கள் தங்களுக்கு ஏற்பட கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் அவ்வபோது சில உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:

மார்பக கட்டிகள்: இந்த கட்டிகளில் வலி இருக்காது. புற்றுநோய் கட்டிகள் மற்ற கட்டிகள் போல் இல்லாமல் சற்று கடினமானதாகவும் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும். இது மார்பகம் மட்டும் இல்லாமல் அக்குள் பகுதியில் வளருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

மார்பகத்தின் அளவு மற்றும் அமைப்பில் மாறுதல்: பொதுவாக பெண்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே போன்று இருக்காது. புதிதாக ஏதேனும் மாற்றம் தெரிந்தால் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மார்பக்கத்தின் சரும மாற்றம்: பொதுவாக மார்பகம் வழுவழுப்பாக இருக்கும். ஆனால் ஆரஞ்சு பழத்தோல் போல் மேடு, பள்ளமாக சற்று சொரசொரப்பாக இருந்தால் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும் மார்பக காம்பிற்கு அருகே உள்ள தோலில் செதில் போன்று வெளி வந்தாலோ அரித்தாலோ பரிசோதிக்க வேண்டும்

மார்பக காம்பில் தண்ணீர் சுரத்தல்: மார்பக காம்பில் தண்ணீர் போன்றோ அல்லது இரத்தம் கலந்த தண்ணீர் போன்றோ சுரந்தால் அதை பரிசோதனை செய்ய வேண்டும்.

மார்பக காம்பின் அமைப்பு: வெளியே இருக்கும் மார்பக காம்புகள் உள்ளுக்குள் சென்றால் அதை பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு பொதுவாகவே மார்பக காம்புகள் உள்ளுக்கப்பட்டு இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் புதிதாக உள்ளுக்கப்பட்டால் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.

மார்பகத்தில் வலி: பொதுவாக மார்பகத்தில் ஏற்படும் வலி மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி இல்லை. எனினும் தொடர்ந்து வலித்தாலோ அல்லது சிவந்து வீங்கி இருந்தாலோ,கடினமாக இருந்தாலோ கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Also Read: Tomato Benefits: இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் தக்காளி.. பல நன்மைகளை கொடுக்கும்!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version