Monsoon health tips: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு குட்பை.. இதை செய்து குணப்படுத்துங்கள்! - Tamil News | How to avoid cold and cough in rainy season; health tips in tamil | TV9 Tamil

Monsoon health tips: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு குட்பை.. இதை செய்து குணப்படுத்துங்கள்!

Cold and Cough: மழை பெய்யும்போது நீண்ட நேரம் மழையில் நனையாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை மழையில் நனைந்தாலும், உடனடியாக நனைந்த ஆடைகளை கழட்டிவிட்டு, உலர்ந்த துணிகளை மாற்றி கொள்ளுங்கள். நீண்ட நேரம் மழையில் நனைவது உங்கள் உடல் வெப்பநிலையை குறைத்து, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும்.

Monsoon health tips: மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு குட்பை.. இதை செய்து குணப்படுத்துங்கள்!

சளி மற்றும் இருமல் (Image: freepik)

Published: 

17 Oct 2024 18:11 PM

மழைக்காலம் என்பது பருவம் மாறும் காலத்தை குறிக்கும். இந்த மாறிவரும் காலநிலை முதலில் தாக்குவது மனித உடல்நிலையைதான். இதுபோன்ற சூழ்நிலையில், மழைக்காலம் தொடங்கியவுடன் சளி, இருமல்,காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் இந்த பருவத்தில் பொதுவானது என்றாலும், சில சமயங்களில் இந்த பிரச்சனை அதிகமாகி சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

மழைக்காலத்தில் வானிலை வேகமாக மாறும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக இது வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற பிரச்சனைகளால் ஏற்படும். வைரஸ் தொற்று ஏற்பட்டால் சளி, தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படும். வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருந்தால், 3 முதல் 10 நாட்களில் தானாகவே குணமாகும். இருப்பினும், பாக்டீரியா தொற்றால் ஏற்பட்டால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது. இந்தநிலையில், வீட்டிலேயே இருக்கும் இந்த பொருட்களை கொண்டு நிவாரணம் பெறலாம்.

ALSO READ: Smoking Side Effects: புகைபிடித்தல் நுரையீரலை மட்டுமல்ல.. அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும்!

கருப்பு மிளகு:

மாறிவரும் வானிலை மற்றும் மாசுபாடு காரணமாக மூக்கு மற்றும் தொண்டை அடைப்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற கருப்பு மிளகை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு சிட்டிகை கருப்பு மிளகு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து இரவு தூங்கும் முன் சாப்பிடவும். இது விரைவில் நல்ல பலனை தரும்.

பூண்டு:

மாறிவரும் பருவத்தில் குளிர்ச்சியை தவிர்க்க பூண்டில் உள்ள வெப்பநிலை நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டை நெய்யில் வதக்கி, வெந்நீரில் கலந்து சாப்பிடுவதால் சளி, இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி:

இஞ்சியில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சி பால் உட்கொள்ளலாம்.

மஞ்சள்:

மஞ்சளில் உள்ள ஆன்டி – பாக்டீரியல் மற்றும் ஆன்டி – வைரல் பண்புகள் மாறிவரும் பருவநிலையினால் ஏற்படும் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க உதவி செய்யும். பாலுடன் மஞ்சள் சிறிதளவு சேர்த்து குடிப்பதன் மூலம் சளி, இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்.. வீட்டிலேயே சுவையான பால் பணியாரம், ஜிலேபி செய்வது எப்படி?

இலவங்கப்பட்டை:

மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து தயாரிக்கப்படும் தேநீர் ஒரு சிறந்த மூலிகை தேநீர் ஆகும். இது சளி மற்றும் இருமலில் இருந்து மட்டும் நிவாரணம் தருவது மட்டுமல்லாமல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. மேலும், இது மூக்கின் உள் அடுக்கில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றன.

துளசி:

துளசி இலைகள், இஞ்சி மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையானது தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றிற்கு இனிமையான நிவாரணத்தை வழங்கும். இதில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் ழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை காலநிலை மாற்றத்தால் ஏற்படும், நோய்த்தொற்றுகளை குணப்படுத்தவும், தடுக்கவும் உதவி செய்கிறது. மேலும், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

சளி, இருமல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்..?

மழை பெய்யும்போது நீண்ட நேரம் மழையில் நனையாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை மழையில் நனைந்தாலும், உடனடியாக நனைந்த ஆடைகளை கழட்டிவிட்டு, உலர்ந்த துணிகளை மாற்றி கொள்ளுங்கள். நீண்ட நேரம் மழையில் நனைவது உங்கள் உடல் வெப்பநிலையை குறைத்து, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். இதன் காரணமாக, உங்களுக்கு காய்ச்சலும் ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்:

வைட்டமின் டி, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் ஆகியவை சளி மற்றும் இருமலை தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற உணவுகளைச் சேர்க்கவும். இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய் ஏற்படுவதை தடுக்கும்.

 

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...