Dengue: உங்களுக்கு டெங்கு இருந்தால் எப்படி தெரிந்து கொள்வது..? அறிகுறிகள் என்ன..? - Tamil News | How to know if you have dengue What are the symptoms; health tips in tamil | TV9 Tamil

Dengue: உங்களுக்கு டெங்கு இருந்தால் எப்படி தெரிந்து கொள்வது..? அறிகுறிகள் என்ன..?

Dengue Fever: பொதுவாக மனித உடலில் 1.5 லட்சம் முதல் 4 லட்சம் பிளேட்லெட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது மனிதனின் பிளேட்லெட்டுகள் வேகமாக குறைய தொடங்கும். அதேபோல், மனிதனின் பிளேட்லெட்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு கீழ் சென்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

Dengue: உங்களுக்கு டெங்கு இருந்தால் எப்படி தெரிந்து கொள்வது..? அறிகுறிகள் என்ன..?

டெங்கு (Image: GETTY)

Published: 

27 Oct 2024 20:51 PM

நாடு முழுவதும் தற்போது மழைக்காலம் என்பது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம். தென் மாநிலங்களை தவிர, டெல்லி, புனே, மகாராஷ்டிரா, லக்னோ உள்ளிட்ட பல மாநிலங்களில் தினமும் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், டெங்கு தொடர்பான சில முக்கியமான விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Firecracker Burn: பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா..? உடனடியாக என்ன செய்யலாம்..?

டெங்கு இருந்தால் எப்படி தெரிந்து கொள்வது..? அதன் அறிகுறிகள் என்ன..?

டெங்கு காய்ச்சலும் சாதாரண காய்ச்சலை போன்றே உடலில் முதலில் தோன்றும். பல நேரங்களில் மக்கள் அதை சாதாரண காய்ச்சல் என்றே எண்ணி வெறும் மாத்திரைகளை மட்டும் போட்டு கொள்கிறோம். இது காலப்போக்கில் பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கும். இத்தகைய சூழ்நிலையில், காய்ச்சல் வந்தால், சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.

டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது, வெப்பநிலை 104 F ஐ தொடும். இது படிப்படியாக உயர்ந்து உடல் நிலையை மோசமாக்கும். மேலும், காய்ச்சல் அடிக்கடி வந்து வந்து போகும். டெங்கு காய்ச்சல் சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் மிகப்பெரிய ஆபத்தை தரும். மேலும், டெங்குவின் அறிகுறிகள் பொதுவாக மூன்று முதல் 14 நாட்களில் தோன்றும்.

டெங்குவின் அறிகுறிகள்:

  • தலைவலி, காய்ச்சல், மூட்டு மற்றும் தசை வலி
  • திடீரென காய்ச்சல் வரும்
  • வாந்தி, குமட்டல்
  • தோல் மீது சிவப்பு தடிப்புகள்
  • பிளேட்லெட் எண்ணிக்கை குறையும்

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டெங்கு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

டெங்கு காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது..?

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. இது பொதுவாக பகல் மற்றும் மாலை வேளைகளில் கடிக்கும். இந்த வகை கொசுகளை அதன் நிறத்தை வைத்து எளிதாக அடையாளம் காணலாம். ஏடிஸ் எஜிப்டி இனத்தின் கொசுக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். மேலும், அதன் உடல் மீது வெள்ளை நிற கோடுகள் இருக்கும்.

பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

பொதுவாக மனித உடலில் 1.5 லட்சம் முதல் 4 லட்சம் பிளேட்லெட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது மனிதனின் பிளேட்லெட்டுகள் வேகமாக குறைய தொடங்கும். அதேபோல், மனிதனின் பிளேட்லெட்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு கீழ் சென்றால் உயிரிழப்பும் ஏற்படலாம். எனவே, டெங்கு வந்த நபருக்கு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மிக முக்கியம்.

  • வைட்டமின் சி நிறைந்த உணவுகளான அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை நிறைந்த புளிப்பு வகை பழங்களை எடுத்து கொள்வது நல்லது.
  • பப்பாளி இலைகளின் சாறுகள் உடலில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க செய்யும். பிளேட்லெட்கள் உடனடியாக அதிகரிக்க செய்ய பப்பாளி இலையின் சாறுகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • புரதம் நிறைந்த உணவுகள் உட்கொள்வது பிளேட்லெட்களை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், முட்டை, சிக்கன், சோயா சங்க்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
  • மாதுளை, பப்பாளி மற்றும் ஆரஞ்சு பழங்களின் ஜூஸ் குடிப்பது ரத்த தட்டுக்களை அதிகரிக்கும்.

ALSO READ: Papaya Seeds Benefits: உடல் பருமன் முதல் மலச்சிக்கல் வரை.. பல பிரச்சனைகளை தீர்க்கும் பப்பாளி விதைகள்..!

டெங்கு காய்ச்சலின் வெவ்வேறு நிலைகள்:

டெங்கு காய்ச்சல் பல நிலைகளை கொண்டுள்ளது. இவைகளின், அறிகுறிகளும் வெவ்வேறு நேரங்களில் மாற தொடங்கும். பொதுவான டெங்கு 5 முதல் 7 நாட்களில் மருந்துகள் இல்லாமலே குணமாகும். பிற டெங்குகள் காய்ச்சல் குறைந்த பிறகு, பல்வேறு அறிகுறிகளை காட்டும். இதில், முதல் அறிகுறிகள் உடலில் பிளேட்லெட்டுகள் குறைய தொடங்கும். அதனை தொடர்ந்து, மூக்கு, ஈறுகள் மற்றும் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படும். இதற்குபிறகு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உடலில் திரவம் குறைந்து இரத்த அழுத்தம் குறைய தொடங்கும். பல சமயங்களில் டெங்கு நோயாளி கோமா நிலைக்கும் செல்லலாம். இதற்கு முறையாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
இந்த பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஆப்பிள் பழம் சாப்பிடக்கூடாது..
வேர்க்கடலை குறித்து ஆய்வுகள் கூறும் தகவல்கள்!
சர்க்கரை நோயாளிகள் எந்த 4 பழங்களை சாப்பிடக்கூடாது?