5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rice: வீட்டில் உள்ள அரிசி, பருப்புகளில் வண்டு தொல்லையா…. உடனே இத பண்ணுங்க..!

 பொதுவாக நாம் அனைவரும் பயணம் செய்வதை விரும்புவோம் அப்படி இருக்கையில் சுற்றுலா ட்ராக்கிங் போன்ற மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மிகவும் ஆர்வத்தோடு காணப்படும் அப்படி சுற்றுலாத் தலங்களில் மிகவும் அறியப்படாமல் விளங்கும் ட்ராக்கிங் செல்வதற்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நாளை மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனைவரும் பரிந்துரைக்கும் ஆனைவாரி மலையை பற்றி காணலாம்.

Rice: வீட்டில் உள்ள அரிசி, பருப்புகளில் வண்டு தொல்லையா…. உடனே இத பண்ணுங்க..!
அரிசி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 03 Jul 2024 08:15 AM

பொதுவாவே நம்ம வீடுகளில் உள்ள வளிகை பொருட்கள் அரிசி பருப்பு போன்றவற்றில் வண்டு இருப்பதை நாம் பார்க்க முடியும். நாம் மாதக்கணக்கில் ஒரு பொருளை சேமித்து வைப்பதன் காரணமாகவே பல பொருட்கள் வீணாக குப்பைக்கு செல்கிறது. முக்கியமாக அரிசி மற்றும் பருப்புகளில் வண்டுகள் அதிக அளவில் காணப்படுவதால் இதனைப் போக்கும் வழிகள் பற்றி காணலாம். வீட்டில் அன்றாடம் சேமித்து வைக்கும் பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பயன்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. நாம் அடுத்த ஒரு மாதத்திற்கு அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சேமித்து வைக்கிறோம் ஆனால் அதனை முறையாக பராமரிப்பது இயலாத ஒன்றாக உள்ளது. இதனால் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டுகள் புழுக்கள் அதிகளவில் காணப்படுவதால், காசு கொடுத்து கடையில் வாங்கும் பொருட்கள் உபயோகமற்றதாக மாறுகிறது. இதனை கட்டுப்படுத்த வீட்டில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து அதனை எவ்வாறு மீண்டும் வராமல் தடுப்பது என்பது குறித்து காணலாம்.

நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து இந்த பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் நன்றாக வெயிலில் காயவைத்து அதனை கழுவி மறுபடியும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதனை மீண்டும் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகின்றது. புழு பூச்சி போன்றவற்றை நீக்கி அதனை காய வைத்து, அந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு செயற்கையாக பயன்படுத்த வேண்டிய பொருட்களை தவிர்ப்பது நல்லது. இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அதனை சரி செய்வது நன்மை அளிக்கும்.

வர மிளகாய்

வரமிளகாய் என்று அழைக்கப்படும் சிவப்பு மிளகாய் நாம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், நாம் பயன்படுத்தும் மளிகை பொருட்களில் அதனை போட்டு வைப்பதன் மூலம் பூச்சிகள் வராமல் தடுக்கலாம். மிளகாயில் உள்ள நெடில் நமக்கு எப்படி எரிச்சலை ஏற்படுத்துவது சூழலையே மிளகாயில் உள்ள நெடில் நமக்கு எப்படி எரிச்சலை ஏற்படுத்துவது போன்ற சூழலை ஏற்படுத்துகிறதோ அதை போல் புழு, பூச்சி மற்றும் வண்டுகளையும் விரட்டுகிறது.

வேப்பிலை

வேப்பிலை மருத்துவ குணம் வாய்ந்தது மட்டுமில்லாமல் உணவுப் பொருட்களை பாதுகாப்பதாகவும் உள்ளது. இதனை பயன்படுத்தி மளிகை பொருட்கள், அரிசி, பருப்பு போன்றவற்றல் இருக்கும் வண்டு பூச்சிகளை விரட்டலாம். வேப்பிலையை நன்றாக காய வைத்து அதனை நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் அரிசி போன்றவற்றில் கலந்து விடவும். அப்படி நான் போட்டு வைப்பதனால் இதிலிருந்து வரும் மனம் பூச்சிகளை விரட்டுகிறது.

கிராம்பு

கிராம்பை நாம் அதிகமாக சமையல் பொருளாக பயன்படுத்தி வருகிறோம். இதில் ஏற்படும் வாசனை பூச்சிகளை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் கிராம்பு தொற்று நோய்களை விரட்டுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு கிராம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி பருப்பு போன்றவற்றில் இதனை போட்டு வைப்பதனால் இதிலிருந்து ஏற்படும் வாசனைக்கு புழு பூச்சிகள் வராமல் பாதுகாப்பாக இருக்கின்றன.