House Cleaning Tips: 5 நிமிடத்தில் ஈஸியா வீட்டை சுத்தம் செய்யலாம்.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! - Tamil News | | TV9 Tamil

House Cleaning Tips: 5 நிமிடத்தில் ஈஸியா வீட்டை சுத்தம் செய்யலாம்.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

Updated On: 

08 Jul 2024 15:57 PM

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு கலை. ஆனால், பலருக்கு கலையை விட கலைக்கத்தான் நன்றாக தெரியும். வீட்டில் உள்ள அனைத்தையும் எடுத்த இடத்தில் எடுத்ததை வைத்தாலே மன அழுத்தம் டென்ஷனும் குறையும். அதேபோல, தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பது, தேவையான பொருட்களை முறையாக அடுக்கி வைக்காதது தான் மிகப்பெரிய தலைவலிக்கு காரணமாக இருக்கிறது.

1 / 6வீட்டை

வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு கலை. ஆனால், பலருக்கு கலையை விட கலைக்கத்தான் நன்றாக தெரியும். வீட்டில் உள்ள அனைத்தையும் எடுத்த இடத்தில் எடுத்ததை வைத்தாலே மன அழுத்தம் டென்ஷனும் குறையும். அதேபோல, தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பது, தேவையான பொருட்களை முறையாக அடுக்கி வைக்காதது தான் மிகப்பெரிய தலைவலிக்கு காரணமாக இருக்கிறது.

2 / 6

எனவே, எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். மாதம் ஒருமுறை வீட்டிற்கு ஒட்டாரை அடிக்க வேண்டும். ஒட்டாரை அடித்தால் வீடு சுத்தமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.

3 / 6

வீட்டில் எப்போதும் பிரதான இடமான சமையல் அறையை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் பராமரிப்பது அவசயம். எனவே, சமையல் முடித்தவுடன் சமையல் அறையை சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல, பாத்திரங்களை அன்றைய தினமே கழுவ வேண்டும். அடுத்த நாள் வரை கழுவாமல் இருந்தால் பூச்சி போன்றவை வர வாய்ப்புகள் அதிகம்.

4 / 6

அதேபோல, கிட்சனில் இருக்கும் மளிகை பொருட்களை அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டும். அப்போது தான் பயன்படுத்தும்போது ஈஸியாக இருக்கும். மாதம் ஒருமுறை மளிகை பொருட்களின் பாட்டில்களை சுத்தம் செய்ய வேண்டும்

5 / 6

நாம் தூங்கும் அறையை சுத்தமாக வைத்திருந்தால் தான் தூக்கம் வரும். எனவே, பெட்ஷீட், தலையணை உறையை வாரத்திற்கு ஒருமுறை துவைக்க வேண்டும். மேலும், புத்தக அலமாறியை மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். அலமாறியில் இருக்கும் துணிகளை அடுக்கி வைக்கவும். இதனை செய்தாலே நாம் தூங்கும் அறை பார்க்க அழகாக இருக்கும்.

6 / 6

முக்கியமாக வீட்டில் இருக்கும் காகித குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். 10 வருடங்களுக்கு முன்பு ஃபிரிட்ஜில் ஆரம்பித்து கடந்த வாரம் வாங்கிய மளிகை சாமான் வரை அனைத்து பில்களையும் எதிலாவது போட்டு வைத்திருப்போம். எந்த ஒரு பொருளுக்காவது வாரண்ட் இருந்தால் அதனுடைய பில்லை புகைப்படமாக எடுத்து வைத்து கொள்ளலாம். மீதம் இருக்கும் காகித குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துவது நல்லது. இல்லையென்றால் கொசு, பூச்சி போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!