Cancer: உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா..? இவை புற்றுநோயாக கூட இருக்கலாம்..!
Cancer Symptoms: வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, இந்த காலத்தில் எவருக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் ஒரு கொடிய நோய். சமீபகாலமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு கொண்டால், அதிலிருந்து தவிர்க்கலாம். நம் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகும்போது சில அறிகுறிகள் தோன்றும்.
உலகளவில் அனைத்து வயதினரிடையேயும் புற்றுநோயின் ஆபத்து அதிகரித்து வருகிறது. இது ஆண்டுதோறும் அதிகபடியான மரணத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, இந்த காலத்தில் எவருக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் ஒரு கொடிய நோய். சமீபகாலமாக வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய் தொடக்க நிலையிலேயே அடையாளம் கண்டு கொண்டால், அதிலிருந்து தவிர்க்கலாம்.
நம் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகும்போது சில அறிகுறிகள் தோன்றும். இவைகளை நாம் எளிதாக எடுத்துக்கொண்டால் பின் நாளில் இவை நம் உயிரை கூட உறிஞ்சலாம். இந்த நிலையில், புற்றுநோய் எந்த மாதிரியான அறிகுறிகளை தரும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Food Recipes: புரட்டாசி சனிக்கிழமை விரதமா..? இந்த முறையில் பாயாசம் செய்து விரதம் விடுங்க!
மச்சங்கள் மற்றும் கொப்புளங்கள்:
திடீரென உங்களது உடலில் மச்சங்கள் அல்லது கொப்புளங்கள் தோன்றலாம். இவை சில நேரங்களில் வலிக்கவும் செய்யும். அப்படியென்றால், வலியை தரமாலே வளர தொடங்கும். அப்படி உங்களது உடலில் திடீரென மாற்றங்கள் நிகழ்ந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது. அதேபோல், உங்கள் உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டு உடனடியாக ஆறவில்லை என்றாலும், அப்போது நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
உடல் எடை குறையும்:
காரணமே இல்லாமல் திடீரென உங்களது உடல் எடை குறைந்தால், அது புற்றுநோயுக்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது, ஒரு சில நாட்களிலேயே 5 கிலோ அல்லது அதற்கு மேல் குறைந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று முழு உடலையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. இது உணவுக்குழாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் ஆகியவற்றின் வளர்ச்சிக் கட்டத்தில்தான் இதுபோன்ற உடல் எடை குறைப்பு நிகழும்.
அதிகப்படியான சோர்வு:
அதிகப்படியான சோர்வை எப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. புற்றுநோயின் அறிகுறிகளில் சோர்வு மிக முக்கியமானது. நீங்கள் நன்றாக தூங்கி எழுந்தாலும் அதிகப்படியான சோர்வை எதிர்கொண்டால் அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
லேசான காய்ச்சல்:
தொடர்ந்து உங்கள் காய்ச்சல் வந்து கொண்டிருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள். புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவும்போது காய்ச்சல் ஏற்படுகிறது. லேசான காய்ச்சல் மருந்துடன் குறையலாம். மீண்டும் மீண்டும் காய்ச்சல் வருவது புற்றுநோயின் அறிகுறியாகும். இந்த விஷயத்தில் சோம்பேறியாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.
இருமல்:
இருமல் 3 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அதிகப்படியான உள் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
கட்டி அல்லது கட்டி உருவாக்கம்:
உடலில் எங்கும் வலியற்ற கட்டி போன்ற வளர்ச்சி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற கட்டிகள் உடலில் தோன்றியவர்களுக்கு 80 முதல் 90 சதவீதம் பேருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.
வாய் புற்றுநோய்:
வாய் புற்றுநோய் உதடுகள், நாக்கு மற்றும் வாயின் தரையில் ஏற்படுகிறது, ஆனால் சிலருக்கு, கன்னங்கள், ஈறுகள், வாயின் மேல் மேற்பரப்பு, டான்சில்ஸ் மற்றும் உமிழ்நீர் சுரப்பிகளிலும் வாய் புற்றுநோய் உண்டாகலாம். பெரும்பாலும், புகையிலை மற்றும் மது அருந்துபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
வாய் புற்றுநோயின் 10 அறிகுறிகள்:
- தளர்வான பற்கள்
- உதட்டில் வீக்கம் அல்லது காயம்
- விழுங்குவதில் சிரமம் அல்லது வலி
- கழுத்தில் கட்டி தோன்றுதல்
- பேச்சில் மாற்றம்
- வெள்ளை அல்லது சிவப்பு நாக்கு
- வாயில் இரத்தப்போக்கு
- வாயில் உணர்வின்மை
- ஈறுகளில் புள்ளிகள்
- எந்த காரணமும் இல்லாமல் எடை இழப்பு
ALSO READ: Mint Leaves Benefits: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை.. எண்ணற்ற நன்மைகளை தரும் புதினா இலைகள்..!
மேலும் சில..
- மலத்தில் ரத்தம் விழுந்தால், அது மலக்குடல் புற்றுநோய் அல்லது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- சிறுநீர் கழிக்கும்போது இரத்தம் வெளிப்பட்டால் அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- அதேபோல், உடலில் அரிப்பு, உடல் நிறமாற்றம், நம் உடலுடன் சேர்ந்து கண்கள் மஞ்சள்-பச்சை நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவது நல்லது.