Spices : மசாலா பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை ஈசியா கண்டுபிடிக்கலாம். - Tamil News | | TV9 Tamil

Spices : மசாலா பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை ஈசியா கண்டுபிடிக்கலாம்.

Published: 

14 May 2024 13:24 PM

Tips and tricks : மசாலாக்களில் செய்யப்படும் கலப்படத்தைக் கண்டறியும் வழிமுறைகள்.

1 / 7நம்

நம் இந்திய கலாச்சாரத்தில், அதுவும் உணவு கலாச்சாரத்தில் மசாலா பொருட்களுக்கு எப்பொழுதுமே முக்கிய இடம் உண்டு. காரசாரமாக சாப்பிடுபவர்கள் நாம். எல்லா வீடுகளிலும் மசாலா டப்பாக்கள் எப்பொழுதுமே நிரம்பியிருக்கும். அது இல்லாவிட்டால் நம் சமையலே இல்லை என்ற நிலைமைக்குப் போய்விடும். அப்படி முக்கியமான இந்த மசாலாக்கல் சுத்தமாகத்தான் இருக்கிறதா அதில் கலப்படம் எதுவும் செய்திருக்கிறார்களா என்பதைப் கண்டறிவதுதான் பெரும் கஷ்டம். ஆனால் அதற்கு ஈசியான சில வழிகளை சொல்கிறோம்.

2 / 7

1. மிளகாய்ப்பொடி : வீட்டில் அரைக்கிறோம் என்றால் கவலையில்லை, அதிலும் ரைஸ்மில்லலில் அரைக்கக் கொடுக்கும்போது சில கலப்படங்கள் செய்யப்படலாம் எனவே நாமே தனியாக அரைத்தாலும் அதிலும் கவனமாக இருக்கவேண்டும். மிளகாய்ப்பொடியைப் பொருத்தவரை விற்பனையாளர்கள் அதனுடைய அளவை அதிகரிப்பதற்காகவும் நிறத்திற்காகவும் கலப்படம் செய்வார்கள். எடையை அதிகரிப்பதற்கு மாவையும் நிறத்தை அதிகரிப்பதற்கு சாயத்தையும் பயன்படுத்துவார்கள். சில நேரத்தில் அபாயகரமான கெமிக்கல் நிறமூட்டிகளையும் பயன்படுத்துவார்கள். இதைக் கண்டறிய ஒரு கிளாஸ் தண்ணீர் போதும். ஒரு ஸ்பூன் மிளகாய்ப்பொடியை தண்ணீரில் போடவும், அது கீழே சென்று படிவதற்கான 5 நிமிடத்தைக் கொடுங்கள். 5 நிமிடத்திற்குப் பிறகு மிளகாய்ப்பொடி அடியில் சென்று படிந்ததும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் மிளகாய்ப்பொடியும் சுத்தமானது. அப்படி இல்லாமல் நிறமேறி இருந்தால் அது கலப்படம் செய்யப்பட் மிளகாய்ப்பொடி.

3 / 7

2. மஞ்சள்தூள்: சுத்தமான மஞ்சள்தூள் மிகவும் ஆரோக்கியமானது. பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஆனால் அதிலும் கலப்படம் செய்கிறார்கள். சாக்பீஸ் தூள், மெத்தனில் மஞ்சள், லெட் குரோமேட் போன்றவற்றை சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூளை போட்டுப் பாருங்கள், அது உடனடியாக அதாவது 10 நிமிடங்களில் அடியில் சென்று படிந்து தண்ணீர் சுத்தமானதாக இருந்தால், அது கலப்படமற்ற மஞ்சள்தூளாக எடுத்துக்கொள்ளலாம்.

4 / 7

3. சீரகத்தூள்: ஒரு ஸ்பூன் சீரகத்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுப்பாருங்கள் எதுவும் மிதக்காமல் அடியில் சென்று தங்கிவிட்டால் அது சுத்தமான சீரகத்தூள். சீரகத்தை சரிபார்க்க இரண்டு கைகளுக்கு நடுவில் வைத்து சீரகத்தை நசுக்கிப் பாருங்கள், உங்கள் கைகள் கருப்பாக மாறினால் அந்த சீரகம் கலப்படம் செய்யப்பட்டது.

5 / 7

4. மிளகு : பெரும்பாலும் பப்பாளி விதைகளை மிளகில் சேர்த்து கலப்படம் செய்வார்கள். இதில் செய்யப்படும் கலப்படத்தைக் கண்டறிய ஒரு ஸ்பூன் மிளகை சுத்தமான ஆல்கஹால், ஜின் அல்லது வோட்காவில் போட்டுப் பாருங்கள், பப்பாளி விதைகள் கலக்கப்பட்டிருந்தால் அது அடியில் சென்று படிந்துவிடும், சுத்தமான மிளகு மேலாக மிதக்கும்.

6 / 7

5. ஏலக்காய்: நாம் பயன்படுத்தும் சமையல் வாசனைப் பொருட்களில் ஏலம் மிக விலை உயர்ந்தது. அதிலும் பயங்கரமாக கலப்படம் செய்கிறார்கள் பெரும்பாலும் ஏலக்காயை வாங்கும்போதே அதன் நிறம் மற்றும் தன்மையை கவனியுங்கள். நல்ல செழிப்பான பச்சை நிறமாகவும், அழுத்திப் பார்த்தால் உள்ளே நல்ல விதையுடனும் இருப்பது சிறந்த ஏலக்காய். வெளிர் பச்சை நிறமாகவும், விதைகளற்று சப்பிப்போய் இருந்தாலும் அது கலப்படமான ஏலக்காய். பெரும்பாலும் எண்ணெய் எடுத்து பயன்படுத்தப்பட்ட ஏலக்காய்களை கலப்படத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

7 / 7

6. பெருங்காயத்தூள்: பெரும்பாலும் சலவைக் கல்லை பெருங்காயத்தூளுடன் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளை சிறிது நீரில் போட்டால் கசடு அடியில் தங்கி சுத்தமான பெருங்காயத்தூள் நீரில் கரைந்துவிடும்.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version