Dengue Fever: மழைக்காலம் வந்தாச்சு… உங்க குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்கள்! - Tamil News | way to prevent dengue fever in home in tamil | TV9 Tamil

Dengue Fever: மழைக்காலம் வந்தாச்சு… உங்க குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்கள்!

Dengue in Children: மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கிவிடும். தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் 11,743 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவற்றை பார்ப்போம்.

Dengue Fever: மழைக்காலம் வந்தாச்சு... உங்க குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்கள்!

டெங்கு (Image: GETTY)

Updated On: 

12 Oct 2024 21:58 PM

மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கிவிடும். தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு இதுவரை மொத்தம் 11,743 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு 9,121 நபர்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்‌ அதிக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தரவுகள் மேம்படுத்தும். டெங்கு என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று. குறிப்பாக இந்தியா போன்ற வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் டெங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும் வீட்டிலேயே திறம்பட நிர்வகிப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அறிகுறிகளை கண்டறிந்தல்:

அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது முக்கியமாகும். அதிக காய்ச்சல், கடுமையான தலை வலி, உடல் வலி, மூட்டு வலி, குமட்டல், வாந்தி, தோல் வெடிப்பு போன்றவை குழந்தைகளிடம் ஏற்படும் பொதுவான அறிகுறி இருப்பினும் இந்த அறிகுறிகள் மற்ற நோய்களை பிரதிபலிக்கும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம். டெங்கு என சந்தேகம் இருந்தால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.

நீர்ச்சத்து ‌ குறைபாடு:

டெங்கு கடுமையான நீரிழப்புக்கு வழிவகுக்கும். போதுமான‌ திரவ ஆகாரத்தை உட்கொள்வது மிக முக்கியமானது.‌ ORS பயன்படுத்துவது நீரேற்றத்திற்கு முக்கிய தீர்வாக அமையும்.‌ ஆனால் தொடர்ந்து வாந்தி எடுத்தால் நரம்பு வழி திரவங்களுக்கு மருத்துவரை அணுக வேண்டும். சர்க்கரை பானங்கள் மற்றும் அதிகப்படியான ரசாயன ஜூஸ்களை தவிர்க்க வேண்டும்.‌ ஏனெனில் அவை வயிற்றுப்போக்கை உண்டாகும்.

காய்ச்சலை நிர்வகித்தல்:

காய்ச்சல் குழந்தைகளுக்கு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.‌ உடலின் வெப்பநிலையை குறைக்க வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும்.‌ காய்ச்சலை குறைக்க பாராசிடமால்‌ பொதுவாக பாதுகாப்பானது. இருப்பினும் ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுஃபனைத்‌ தவிர்க்கவும். ஏனெனில் அவை ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.

ஊட்டச்சத்து தேவைகள்:

சீரான உணவு மீண்டு வருவதற்கு அவசியமாகும்.‌ பசியின்மை ஏற்பட கூடும் என்றாலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தயிர் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் படி குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.‌ அதிகளவில் எண்ணெயில் பொரித்த உணவை தவிர்க்க வேண்டும்.

Also Read: Food Recipes: சாப்பிட ஆசையை தூண்டும் கொய்யா சட்னி.. இப்படி செய்து ருசித்து பாருங்க..!

ஓய்வு மற்றும் ஆறுதல்:

பெரும்பாலும் டெங்கு பாதித்தவர்களை வீட்டிலேயே கவனித்துக் கொள்ள முடியும். இருந்தாலும் சில அறிகுறிகள் உடனடி மருத்துவ கவனிப்பின் அவசியத்தை குறிப்பிடுகின்றன. இவை தொடர்ச்சியான வாந்தி, கடுமையான வயிற்று வலி, சுவாசிப்பதில் சிரமம், உயிர்களில் இரத்தப்போக்கு, மூக்கில் ரத்தம் கசிதல், மலம் கறுப்பாக வருதல் மற்றும் வெப்ப நிலையில் திடீர் வீழ்ச்சி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தடுக்கும் முறைகள்:

கொசுக்கடியில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது மிக முக்கியமாகும். கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.‌ பாதுகாப்பான ஆடைகளை அணியவும். உங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுவலைகளும் நன்மை பயக்கும்.

பிளேட்லெட்டுகளின்‌ பங்கு:

இரத்தம் உறைதலில் பிளேட்லெட்டுகள் எனப்படும் குருதி தட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றாலும் அது குறித்து அதிக அளவில் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதிக நீரேற்றும் மற்றும் சரியான பராமரிப்பு செய்தாலே டெங்குவிலிருந்து விரைவில் குணமடையலாம்.

Also Read: Late Night Eating Side Effects: இரவு தாமதமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!

பாரம்பரிய வைத்தியம்:

சில பாரம்பரிய வைத்தியங்கள் டெங்கு அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது.‌ அவற்றின் செயல் திறன்களுக்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், சில வீட்டு வைத்தியம் டெங்குவிற்கு பயன்படுகிறது.‌ எந்த ஒரு மூலிகை அல்லது வீட்டு வைத்தியத்தை பயன்படுத்துவதற்கு முன்பு குழந்தை மருத்துவரை அணுகுவது அவசியம். டெங்கு என்பது ஒரு தீவிரமான நோய் எனவே அதை கவனமாக கண்காணிக்க வேண்டும். சிறு பாதிப்படைந்தவர்களுக்கு வீட்டு வைத்தியம் பயனுள்ளதாக இருக்கும் ஆனால் எப்பொழுதும் மருத்துவ ஆலோசனைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முன்கூட்டியே கண்டறிவதும் சரியான கவனிப்பும் குழந்தைகளை மோசமான விளைவுகள் இருந்து காப்பாற்றலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

கிவி பழம் தினசரி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்?
டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
Exit mobile version