சென்னையை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரியங்கா மோகன். இவரது அம்மா கர்நாடகாவை சேர்ந்தவர். அப்பா தமிழர் ஆவார். நவம்பர் மாதம் 20-ம் தேதி 1994-ம் ஆண்டு இவர் பெங்களூரில் பிறந்தார்.
2019 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஓந்து கதே ஹெல்லா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்த பிரியங்கா மோகன், நானியின் நானிஸ் கேங் லீடர் என்ற படத்தில் நடித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பிரியங்கா மோகன் அறிமுகமானார். அப்பாவியான க்யூட் கேர்ளாக நடித்த பிரியங்கா மோகன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவ கார்த்திகேயனுடன் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில்அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்தார்.
இறுதியாக தமிழில் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன். தொடர்ந்து சாதுவான பெண்ணாக நடித்த பிரியங்கா மோகன் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் போராளியாக நடித்திருப்பார். இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இதனை தொடர்ந்து தெலுங்கில் நானியுடன் சரிபோதா சனிவாரம் படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா மோகன். இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கு பிரியங்கா மோகனுக்கு இன்ஸ்டாகிராமில் 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.