Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? - Tamil News | tamilnadu powercut 25 october chennai erode salem and many other parts to face power outage | TV9 Tamil

Tamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை மின்தடை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Published: 

24 Oct 2024 18:32 PM

தமிழ்நாடு மின்தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 25) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 5ஒவ்வொரு

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5

அந்த வகையில், பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 25) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, புதுக்கோட்டை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 / 5

அதன்படி, சென்னையில் அரசு எஸ்டேட் பகுதியில் வாலாஜா சாலை, டிரிப்ளிகேன் ஹை ரோடு, எல்லிஸ் சாலை, எல்லிஸ் புரம், அண்ணாசாமி தெரு, தாராசாஹிப் தெரு, பங்காரு நாய்க்கன் தெரு, பாலமுத்து தெரு, சின்னதம்பி தெரு, முக்தர்நிஷா பேகம் தெரு, நாராயண நாய்கன் தெரு, நாகப்பன் தெரு, கித்தாபதன் பகதூர் தெரு, பாபர் கான் தெரு , வல்லப அக்ரகாரம் தெரு, அப்பாவு தெரு, உன்னிஸ் அலி தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, குலாம் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

4 / 5

மேலும், சென்னையின் அவுலியா சாகிப் தெரு, தௌலத்கான் தெரு, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, லாக் நகர், கலைவாணர் அரங்கம், பொதுப்பணித்துறை வளாகம், சென்னை பல்கலைக்கழகம், காமராஜ் சாலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

5 / 5

கோவையில் தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை, புலியங்குளம் சாலையில் மின்தடை செய்யப்படுகிறது. ஈரோட்டில் ரயில் நகர், கே.கே.நகர், உலவநகர், மாரப்பன் வீதி, வரதராஜன் காலனி பகுதிகள். சேலம் மேட்டூரில் தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகள். பல்லடம் பகுதிகளில் அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!