கடந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் மற்றும் ஆன்லைன் முன்பதிவு ஆகிய இரண்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் தினமும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தார்கள். ஆனால் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வரிசைகள், தரிசன கவுண்டர்கள், போக்குவரத்து ஏற்பாடு செய்யவில்லை. இதன் விளைவாக 80000 முதல் 90000 பக்தர்கள் தரிசிக்க 20 மணி நேரம் ஆனது.