இவர் 1962ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா குழுமத்தில் சேர்ந்தார். இவர் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றினார். ஜெ.ஆர்.டி. டாடா, 1991ல் ஓய்வு பெற்றவுடன் டாடாவின் மோட்டார்ஸ் டாடா பவர், டாடா கண்சல்டன்சி சர்வீஸ், டாடா தேனீர், டாடா கெமிக்கல்ஸ், தி இந்திய ஹோட்டல்ஸ் கம்பெனி, டாடா டெல்சர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கு தலைவரனார் ரத்தன் டாடா. இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் நிறுவனங்களை கையகப்படுத்தியது.