கங்கைகொண்ட சோழபுரம்: அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. 560 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட இந்தக் கோயிலின் மூலவராக சிவன் இருக்கிறார். அர்த்தநாரீஸ்வரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரஸ்வதி போன்ற 50-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கே உள்ளன. சோழர் கலைக்கு சான்றாக விளங்கும் இந்தக் கோயில் 2004 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.