5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mantras : இந்த மந்திரங்களை சொல்லிப்பாருங்கள், கைமேல் பலன் கிடைக்கும்!

10 powerful mantras : சக்தி வாய்ந்த பத்து மந்திரங்கள்! மந்திரம் என்பது கடவுளை அருகில் சென்று அணுகுவதற்கான ஒரு வழி. சித்தர்களும், மகானகளும் மந்திரங்களை ஜெபித்தே இறைவனை அடைந்தார்கள். மந்திரத்திற்கு அந்த அளவிற்கு சக்தி உண்டு.

Mantras : இந்த மந்திரங்களை சொல்லிப்பாருங்கள், கைமேல் பலன் கிடைக்கும்!
இந்த மந்திரங்களை சொல்லிப்பாருங்கள், கைமேல் பலன் கிடைக்கும்!
Follow Us
intern
Tamil TV9 | Published: 15 May 2024 23:33 PM

சாமி கும்பிடும்போது நமக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி சாமி கும்பிடுவோம், அவ்வாறு கும்பிடும் போது நாம் நினைத்தது நடக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் சில மந்திரங்களைச் சொன்னால் உடனே பலன் கிடைக்குமென்றால் நம்புவீர்களா? நம்பித்தானே ஆகவேண்டும். இதோ வேண்டியது உடனே கிடைக்க சிறந்த பத்து மந்திரங்கள்.

மந்திரம் என்பது கடவுளை அருகில் சென்று அணுகுவதற்கான ஒரு வழி. சித்தர்களும், மகானகளும் மந்திரங்களை ஜெபித்தே இறைவனை அடைந்தார்கள். மந்திரத்திற்கு அந்த அளவிற்கு சக்தி உண்டு. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மந்திரம் உண்டு அதேபோல, ஒவ்வொரு மந்திரத்தையும் உச்சரிக்கும் விதம், எண்ணிக்கையும் மாறுபடும். ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும்போது அது நமக்கு கவசமாக மாறி நம்மை காக்கும்.

1. பயம் மற்றும் கெட்ட சக்திகளில் இருந்து விடுபட, நாம் சொல்லவேண்டிய மந்திரம்”ஓம் ஹம் ஹனுமந்தாய நமஹ”

2. விருப்பங்கள் நிறைவேற, வியாழக்கிழமைதோறும் சொல்லவேண்டிய மந்திரம், “ஓம் க்லீம் விஷ்ணுவே நமஹ”

3. அனைத்துத் தடைகளும் விலக, விடாமல் சொல்லவேண்டிய மந்திரம், “ஓம் கம் கணபதயே நமஹ”

Also Read: குழந்தைகளின் மனநிலையை அதிகம் பாதிக்கும் ஜங்க் புஃட்ஸ்!

4. விருப்பமும் ஆசையும் நிறைவேற, வெள்ளிக்கிழமைதோறும் சொல்லவேண்டிய மந்திரம், ” ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லட்சுமிபியோ நமஹ”

5. ஆன்மா, உடல் ,மனம் தூய்மைப்பெற்று சிறந்த கல்வியைப் பெற சொல்லவேண்டிய மந்திரம், ” ஓம் பூர் புவ ஸூவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநக ப்ரசோதயாத்”

6. உள்ளும் புறமும் நேர்மறை எண்ணங்களைப் பெற சொல்லவேண்டிய மந்திரம், “ஓம் நம சிவாய”

7. மன அழுத்தம் மற்றும் மன அமைதிக்கு, தினமும் 3 முறை சொல்லவேண்டிய மந்திரம் “ஓம்” என்னும் பிரணவ மந்திரம்

8. நவகிரக பிரச்சனை தீர மற்றும் வாழ்க்கையையே மாற்ற சொல்லவேண்டிய மகாமிருத்யுஜ்ய மந்திரம்,
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்”

9. எப்பேற்பட்ட பிரச்சனையிலிருந்தும் வெளயே வர சொல்லவேண்டிய மந்திரம் “லலிதா சகஸ்ரநாமம் “.

10. எதிரிகளை எதிர்கொள்ள எடுத்துச் சொல்லவேண்டிய மந்திரம், “ஓம் விஷ்வாய நாம கந்தர்வலோசினி நாமி லவுசதிகர்னை தாஸ்மை விஷ்வாயா ஸ்வாஹா”

Latest News