Aippasi Month: ஐப்பசியில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாதா? – சாஸ்திரம் சொல்வது என்ன? - Tamil News | Astrology Babies born in Aippasi month cause trouble for the father | TV9 Tamil

Aippasi Month: ஐப்பசியில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாதா? – சாஸ்திரம் சொல்வது என்ன?

கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகும் காலம் தான் ஐப்பசி மாதம் என அழைக்கப்படுகிறது. ஐப்பசி என்றாலே தீபாவளி, கந்த சஷ்டி, ஐப்பசி அடை மழை என பல முக்கிய நிகழ்வுகள் நிறைந்த இந்த மாதத்தில் குழந்தை பிறப்பது தந்தைக்கு ஆகாது என கருத்து காலம் காலமாக நிலவி வருகிறது. ஜோதிடத்தை பொருத்தவரை ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் அதிகமான பலம் பெற்று சஞ்சரிக்கும்.

Aippasi Month: ஐப்பசியில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாதா? - சாஸ்திரம் சொல்வது என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

18 Oct 2024 14:45 PM

ஐப்பசி மாதம் பிறந்தவர்கள்: பொதுவாக ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் பாதகமும், சாதகமும் இருக்கும். அதே போல் தான் ஆங்கில மாதத்திலும், தமிழ் மாதத்திலும் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் என்பது இருக்கும். ஆனால் தமிழ் மாதங்களில் சில மாத நாட்களில் பிறக்கும் குழந்தைகளால் குடும்பம், தொழில், எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம் ஆகிவற்றில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாதம் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று ஒரு கருத்து  பரவலாக நிலவுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமாக ஐப்பசி மாதம் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

அப்படியாக பார்க்க போனால் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகும் காலம் தான் ஐப்பசி மாதம் என அழைக்கப்படுகிறது. ஐப்பசி என்றாலே தீபாவளி, கந்த சஷ்டி, ஐப்பசி அடை மழை என பல முக்கிய நிகழ்வுகள் நிறைந்த இந்த மாதத்தில் குழந்தை பிறப்பது தந்தைக்கு ஆகாது என கருத்து காலம் காலமாக நிலவி வருகிறது. ஜோதிடத்தை பொருத்தவரை ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் அதிகமான பலம் பெற்று சஞ்சரிக்கும்.

அதேநேரத்தில் மற்றொரு ராசி பலவீனமடையும். அந்த வகையில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் சுக்கிரன் ஆட்சி செய்யும் வீடுகளில் ஒன்றான துலாம் ராசிக்கு சஞ்சரிக்கும் போது நீச்சமடைந்து பலவீனமான நிலையில் இருக்கும் என கருதப்படுகிறது. ஜோதிடத்தை பொருத்தவரை சூரியன் என்பது தந்தையை குறிக்கும் கிரகமாக உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் சூரியன் பலவீனமாக இருப்பதால் ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு சூரியன் காலம் நீண்டதாக அமைந்திருப்பதால் தான் குழந்தைக்கு ஆகாது என சொல்லப்படுகிறது.

Also Read: Karthigai Viratham: பலன்களை அள்ளித்தரும் ஐப்பசி கார்த்திகை விரதம் மேற்கொள்வது எப்படி?

இந்தக் கருத்து உண்மையா என்றால் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காரணம் இதே ஐப்பசி மாதத்தில் பிறந்து வாழ்க்கையில் புகழை அடைந்த பலரும் உள்ளனர். அதேபோல் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தந்தை ஆகியோர் வாழ்க்கையில் பல துன்பங்களை எதிர்கொண்டாலும் நல்ல நிலைமையிலேயே இருப்பார்கள் என கூறப்படுகிறது. பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் சூரியன் பலவீனம் அடைந்து காணப்பட்டால் கூட அதன் தாக்கம் உறவின் வழியாக எந்தவித பிரச்சனைக்கும் வழி வகுக்காது.

ஒவ்வொரு பிறக்கும் குழந்தையும் பிறக்கும் ராசி, நட்சத்திரம், நேரம், கிரகம், லக்னம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதன் பலன்கள் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பிட்ட கிரக நிலையில் சூரியனின் பலவீத்தால் ராஜயோகம் ஏற்படக்கூட வாய்ப்பு உண்டு. இதனால் நவம்பர் மாதம் பிறந்தவர்கள் தந்தைக்கு உயர் அரசாங்கப் பதவிகள் கூட தேடி வரும். சூரியன் நேரடியாக பலம் பெற்று அதிகாரம் செல்வாக்கை பெறுவதைவிட சூரியன் நீச்சம் அடைந்து அதன் மூலம் ராஜயோகம் பெறுவது பல மடங்கு நற்பலன்களை கொடுக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் கிடைக்கும் என்பதால் அஞ்ச தேவை இல்லை. இதே ஐப்பசியில் சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் பேரரசனாகவும், பலம் வாய்ந்தவனாகவும் திகழ்ந்தார். அவர் கட்டிய தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் உலக மக்களுக்கு அதன் புகழையும், ராஜராஜ சோழனின் சிறப்பையும் பரப்பிக் கொண்டிருக்கிறது.

Also Read: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!

பொதுவாக இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அலங்கார பிரியர்களாகவும், வித்தியாசமான ஆடை, அணிகலன்கள் அணிவதில் அதிக விருப்பம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். துலாம் ராசி என்றாலே அதன் அடையாளம் தராசு தான். எப்படி தராசு சரிசமமாக எடை போடுமோ அதை போல் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நீதியையும் நேர்மையும் சமமாக கடைபிடிக்கும் குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் விதவிதமான உணவுகளை தேடி தேடி சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அனைவரிடத்திலும் நட்பு பாராட்டி அதனை கடைசி வரை கொண்டு செல்வார்களாக ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள். ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் காவிரியில் நீராட வேண்டும் என கூறப்படுகிறது. இது முற்பிறவி பாவங்களையும் போக்கும் வலிமை கொண்டதாக நம்பப்படுகிறது. ஐப்பசி  மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் காவேரியில் நீராடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?