Lucky Astrology: ஒரே இடத்தில் ஒன்றுகூடும் 5 கிரகங்கள்.. 5 ராசிக்கு ராஜயோகம் தான்!
ஜோதிடத்தைப் பொறுத்தவரை சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, ராகு மற்றும் கேது என 9 கிரகங்கள் உள்ளது. இந்த ஒன்பது கிரகங்களில் 5 கிரகங்களின் பாக்கியம் ஒரே ராசியில் கிடைப்பது என்பது மிகவும் அரிது. தற்போது ஐந்து ராசிக்காரர்களும் இப்படி அபூர்வ ஐந்து கிரகங்களின் பாக்கியம் பெற்றுள்ளனர்.
ஜோதிடப்பலன்: பொதுவாக மனித சமூகத்தினரிடையே ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், இல்லை என சொல்பவர்கள் என கருத்தைக் கொண்டவர்கள் உள்ளார்கள். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட விதியை நம்புவார்கள். அந்த விதி என்பது கிரகப்பலன்களின் அடிப்படையில் அமைவதாக ஜோதிடத்தை நம்புகிறவர்கள் தெரிவிப்பார்கள். ஆக மொத்தத்தில் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வையும் சரியாகவோ, தவறாகவோ நிர்ணயிப்பதில் கிரகங்கள் பெயர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, ராகு மற்றும் கேது என 9 கிரகங்கள் உள்ளது. இந்த ஒன்பது கிரகங்களில் 5 கிரகங்களின் பாக்கியம் ஒரே ராசியில் கிடைப்பது என்பது மிகவும் அரிது. தற்போது ஐந்து ராசிக்காரர்களும் இப்படி அபூர்வ ஐந்து கிரகங்களின் பாக்கியம் பெற்றுள்ளனர்.
அதன்படி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் ஆகிய 5 ராசிகள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகின்றனர். இந்த அதிர்ஷ்டத்தால் நவம்பர் 15 ஆம் தேதி வரை இந்த ராசிக்காரர்களுக்குப் செல்வம் உள்ளிட்ட அனைத்து வகையான பலன்களும் கிடைத்து பசுமையான களம் போல் வாழ்க்கை செல்கிறது. இந்த 5 ராசிக்காரர்கள் எடுக்கும் எந்த முயற்சியும் மனதார நிறைவேறும். வேலை மற்றும் திருமண முயற்சிகளில் எதிர்பாராத முடிவுகள் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ஆகியவற்றில் மகாராஜா யோகம் உண்டாகும் என சொல்லப்படுகிறது.
Also Read: Astrology: கனவிலோ, வீட்டிலோ குரங்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
- மேஷம்: இந்த ராசிக்கு வியாழன், செவ்வாய், சூரியன், புதன், சனி ஆகிய கிரகங்கள் மிகவும் நன்மை பயக்கும் கிரகங்களாக உள்ளது. எனவே மனதின் முக்கியமான நம்பிக்கைகள், லட்சியங்கள் மற்றும் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும். உத்தியோகத்தில் நல்ல பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் கண்டிப்பாக லாபகரமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு மற்ற நாடுகளிலிருந்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரும்பாலும் நல்ல செய்திகள் கேட்கும் நிலை உண்டாகும்.
- ரிஷபம்: இந்த ராசிக்கு ராகு, வியாழன், ராசி அதிபதி சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோர் மிகவும் சாதகமாக உள்ளனர். இதனால் திடீர் நிதி ஆதாயத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பங்குகள் மற்றும் முதலீடுகள் லாபகரமானதாக அமையும். உத்தியோகத்தில் சம்பளம் கூடும். தொழில், வியாபாரத்தில் விரும்பிய நிலையில் லாபம் இருக்கும். வீட்டில் சுப முன்னேற்றங்கள் ஏற்படும். சிறிய முயற்சியால் சொந்த வீடு கனவு நனவாகும். நல்ல திருமண உறவு இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- கடகம்: வியாழன், புதன், சூரியன், சுக்கிரன் மற்றும் கேது இந்த ராசியில் நன்றாக சஞ்சரிக்கிறார்கள். இதன் பலனாக வெளிநாட்டு பணத்தை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். வேலையில்லாதவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து சலுகைகள் மற்றும் அழைப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் நல்ல வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வருமானம் இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கும். சச்சரவுகளும் பிரச்சனைகளும் தீர்ந்து மதிப்புமிக்க சொத்துக்கள் கூடிவரும். வேலை, திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.
Also Read: Surasamharam 2024: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் தேதி… முழு விவரங்கள்!
- கன்னி : இந்த ராசிக்கு சனி, வியாழன், செவ்வாய், புதன், சூரியன் ஆகியோர் மிகவும் சாதகமாக இருப்பதால் உத்தியோகத்தில் மட்டுமின்றி குடும்பத்திலும் நல்ல பலன்கள் ஏற்படும். எந்த முயற்சியும் வெற்றி பெறும். பல தரப்பிலிருந்தும் வருமானம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கப்படும். சொத்து மதிப்பு வெகுவாக உயரும். வேலையில்லாதவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். பணக்கார குடும்பத்தில் திருமண வரன் கிடைக்கப்பெறும். ஆரோக்கியம் மேம்படும்.
- மகரம்: இந்த ராசிக்கு சனி, ராகு, வியாழன், சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதால் திட்டமிட்ட வேலைகள் திட்டமிட்டபடி நிறைவேறும். எந்த முயற்சி செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். சொத்து தகராறு தீர்ந்து மதிப்புமிக்க சொத்து ஒன்று சேரும். வருமானம் நன்றாக வளரும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் விரிவடையும் வாய்ப்பு உள்ளது. சொத்து வைத்திருப்பவர்களுடன் திருமண உறவு ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு அரிய சலுகைகள் கிடைக்கும்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)