5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Dream Theory: குழந்தை அழுவது போல கனவு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Baby Crying: கனவில் சில நேரம் யாராவது அழுவது போலவும், துக்கத்தில் இருப்பது போலவும் காட்சிகள் வரலாம். அப்படி வரும் பட்சத்தில் நாம் இறைவனிடம் தான் அனைத்தையும் முறையிடுவோம். ஆனால் ஜோதிடத்தில் இவற்றுக்கு எல்லாம் என்ன பலன், காரணம் என்பது கணிக்கப்பட்டிருக்கும். அப்படியிருக்கையில் குழந்தைகள் அழுவது கனவில் தோன்றினால் என்ன நடக்கும்?

Dream Theory: குழந்தை அழுவது போல கனவு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Jul 2024 10:51 AM

கனவு பலன்கள்: பொதுவாக தூக்கத்தில் நல்ல கனவுகள் வர வேண்டும் என நம் அனைவருமே நினைப்போம். ஆனால் நாம் பார்த்த, கேட்ட, நினைத்த விஷயங்கள், சந்தித்த நபர்கள் எல்லாம் கனவுகளாக வருவார்கள். அதேசமயம் எதிர்பாராத விரும்பத்தகாத நிகழ்வுகளும் கனவுகளில் காட்சிகளாக விரிந்து நம் தூக்கத்தை மட்டுமல்லாது, மன நிம்மதியையும் சீர்குலைக்கும். இதனால் தூங்கும்போது கூட இடம், பொருள் அறிந்து தூங்க சொல்வார்கள். இத்தகைய கனவில் சில நேரம் யாராவது அழுவது போலவும், துக்கத்தில் இருப்பது போலவும் காட்சிகள் வரலாம். அப்படி வரும் பட்சத்தில் நாம் இறைவனிடம் தான் அனைத்தையும் முறையிடுவோம். ஆனால் ஜோதிடத்தில் இவற்றுக்கு எல்லாம் என்ன பலன், காரணம் என்பது கணிக்கப்பட்டிருக்கும். அப்படியிருக்கையில் குழந்தைகள் அழுவது கனவில் தோன்றினால் என்ன நடக்கும் என்பது பற்றி காணலாம்.

தொடர்பில்லாத குழந்தை அழுதால்:

சில நேரங்களில் நாம் இதுவரை வாழ்க்கையில் கண்டிராத ஒரு சிறு குழந்தை கனவில் அழுவதைக் கண்டிருப்போம். அப்படி நீங்கள் கண்டால் பதற வேண்டாம். காரணம் இந்த காட்சியால் நல்ல செய்தியைக் கேட்பீர்கள் என்று அர்த்தம். அதுமட்டுமின்றி வீட்டுக்கும் இது மிகவும் நல்லது. பல ஆண்டுகளாக காத்திருக்கும் பணிகள் விரைவில் முடிவடையும். எனவே உங்களுக்கு இதுபோன்ற கனவுகள் இருந்தால் கவலைப்படாமல் இருங்கள்.

Also Read: Vastu Tips: வீட்டில் கற்றாழை வைக்க சிறந்த இடம் எது தெரியுமா?

நீங்கள் குழந்தைகள் சிரிப்பதாக கனவு கண்டால்!

உங்கள் கனவில் குழந்தைகள் சிரிப்பதாக நீங்கள் கண்டால், விரைவில் நல்ல செய்தியைக் கேட்பீர்கள் என்று அர்த்தம். அதுமட்டுமின்றி நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த எதிர்பாராத செய்திகளும் கிடைக்கும். உங்கள் கனவுகள் நனவாகும். வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் காலத்தை செலவிடுவார்கள். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.

உங்களுக்குத் தெரிந்த குழந்தை அழுகிறது என்றால்!

பொதுவாக, உங்கள் கனவில் நன்கு தெரிந்த குழந்தைகள் அழுவதைக் கனவில் கண்டால், நீங்கள் திட்டமிட்ட பணிகளைச் செய்வதில் தோல்வி அடைவீர்கள் என்று அர்த்தம். எதிர்பாராத உடல்நலக் கோளாறுகளும் ஏற்படும். மேலும் குழந்தைகளுக்கான வேண்டுதல்கள் ஏதேனும் பாக்கி வைத்துள்ளீர்களா என சிந்தித்து நிறைவேற்றுங்கள். தைரியமாக இருங்கள்.

Also Read: Anthili Narasimhar: தீராத கடன் பிரச்னைகளை தீர்க்கும் அந்திலி நரசிம்மர்!

புதிதாகப் பிறந்த குழந்தை காணப்பட்டால்!

புதிதாகப் பிறந்த குழந்தையை உங்கள் மடியில் வைத்திருப்பதாக நீங்கள் கனவு கண்டால், நெருங்கிய நண்பரின் வீட்டிலிருந்து குழந்தை பிறந்த செய்தியைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

பிறந்த குழந்தை சத்தமாக அழுதால்!

புதிதாகப் பிறந்த குழந்தை சத்தமாக அழுவதை நீங்கள் பார்த்தால், எதிர்காலத்தில் நீங்கள் நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று அர்த்தம். எனவே கவனமாக இருப்பது நல்லது.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News