Spiritual: உங்கள் வீட்டுக்கு இந்த உயிரினங்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? - Tamil News | Do you know what happens when these animals and birds enter the house | TV9 Tamil

Spiritual: உங்கள் வீட்டுக்கு இந்த உயிரினங்கள் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Published: 

05 Oct 2024 22:00 PM

நம்முடைய வாழ்க்கையிலும், வீட்டிலும் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பொதுவான மற்றும் ஜோதிட ரீதியிலான காரணங்கள் உள்ளது. அந்த வகையில் வெளி உலகில் வாழும் உயிரினங்கள் பொதுவாக நம்முடைய வீட்டுக்கு வருவது இயற்கையான நிகழ்வு தான் இன்ஸ்டாலும் ஜோதிட ரீதியாக அதற்கு பலன்களும் பரிகாரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வகையில் பின்வரும் உயிரினங்கள் நம்முடைய வீட்டுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி காணலாம்.

1 / 6வீடுகளிலும்,

வீடுகளிலும், வீடு பக்கத்திலும் தேனீக்கள் கூடு கட்டக்கூடாது. அப்படி கட்டினால் அது எதிர்மறையான எண்ணங்களையும், கடன் மற்றும் வறுமையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் வீடுகளில் குளவி கூடுவது கட்டுவது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.

2 / 6

புறாக்கள் வீட்டிற்கு வந்தால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் மகாலட்சுமியின் வாகனமான ஆந்தைகள் வீட்டிற்கு வந்தால் வறுமை நீங்கி செல்வ வளம் பெரும் என சொல்லப்படுகிறது. அதேபோல் மகாவிஷ்ணுவின் வாகனமாக கருதப்படும் கழுகுகள் வீட்டிற்கு வந்தால் மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது

3 / 6

மயில்கள் வீட்டிற்கு வருவதும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. வீட்டில் நிலவும் எதிர்மறையான விஷயங்களையும், ஆபத்தான நிகழ்வுகளையும் மயில்கள் காட்டிக்கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

4 / 6

கருப்பு நிற எறும்புகள் வந்தால் அதில் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. வீட்டில் அமைதி, சந்தோஷம், இழப்பு, துன்பம் போன்ற விஷயங்கள் நடப்பதற்கு எறும்புகள் வீட்டில் நடமாடுவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் கடிக்கும் எறும்புகள் வீட்டிற்கு வருவது அதிர்ஷ்டம் கிடையாது.

5 / 6

அணில்கள் வீட்டிற்குள் வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பிரிந்து போன சொந்தங்கள் ஒன்று சேரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.

6 / 6

பட்டாம்பூச்சியின் வருகை வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் வரும் அறிகுறியாகும். இது மகிழ்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வீட்டு பிரச்னைகள் சரியாகும். ஆகவே வீட்டில் பட்டாம்பூச்சியைக் கண்டால், உங்கள் ஆசைகளில் ஒன்று விரைவில் நிறைவேறும் என்பது அர்த்தமாகும்.

Follow Us On
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
நெல்லிக்கனி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
Exit mobile version