Chanakya Niti: வாழ்க்கையில் பணப்பிரச்னையா? – இந்த 4 வழியை ஃபாலோ பண்ணுங்க!
Motivation Tips: ஒருவர் வறுமையில் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் இதுபோன்ற சிரமங்களை எளிதில் சமாளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் ஒன்றை மட்டும் செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் தங்கள் இலக்குகளை தெளிவாக அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பணப் பிரச்னை: நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். குறிப்பாக வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வித்தியாசமாக எதிர்கொள்வோம். என்றைக்காவது நம் பொருளாதார பிரச்னை தீராத என்ற கவலையுடன் வாழ்க்கையை நகர்த்துவோம். ஆனால் இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் யார் வேண்டுமானாலும் நன்றாக வாழ முடியும் என்றால் நம்ப முடிகிறதா?. சாணக்கிய நீதியின் படி ஒருவர் வறுமையில் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் இதுபோன்ற சிரமங்களை எளிதில் சமாளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நாம் ஒன்றை மட்டும் செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் தங்கள் இலக்குகளை தெளிவாக அமைக்க வேண்டும். அந்த இலக்குகளை அடைய ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். இதை செய்தால் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என சாணக்கிய நீதி சொல்கிறது.
Also Read: Thiruvalasuzhi Pillaiyar: திருமண தடையால் அவதியா? – இந்த பிள்ளையார் கோயில் போங்க!
தொடர்ந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்
அனைத்து தனிமனிதர்களும் வாழ்நாள் முழுவதும் கற்றல் மனநிலையை கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் அறிவைப் பெறுவதில் சுணக்கம் காட்டாதீர்கள். அதே சமயம் ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் தைரியமாக ஒப்புக்கொண்டு அதனை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். மேலும் புதிய யோசனைகளுக்கு ஏற்ப சூழ்நிலைகளை மாற்றியமைத்து முடிவுகளை எடுக்க வேண்டும். தொடர்ந்து கற்றல் உங்களை முன்னுக்கு வைத்திருக்கும். அந்த நிபந்தனைகள் சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றது.
ரகசியத்தன்மையை பேணுங்கள்
வாழ்க்கையில் ரகசியத்தன்மை மற்றும் அதை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் ரகசிய தகவல்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். அவ்வாறு செய்வது உங்களுக்கு எதிராக எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படலாம் அல்லது உங்கள் முன்னேற்றத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதேசமயம் தேவைப்படும் விஷயங்களில் மட்டும் தலையிடுங்கள். மற்ற நேரங்களில் வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்.
Also Read: Chennai Tour: சென்னையில் ஒருநாள் சுற்றுலா.. எங்கெங்கு செல்லலாம்..? இங்கே தெரிஞ்சுக்கோங்க!
உணர்ச்சிகளின் கட்டுப்பாடு
வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகியவற்றை பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தற்காலிக உணர்ச்சிகள் அல்லது ஆசைகளால் பாதிக்கப்பட்டால் நம்முடைய இலக்கு சிதைந்து காணாமல் போய்விடும். எனவே சொந்தமாக பகுத்தறிவு முடிவுகளை எடுக்க சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும். இதன் மூலம் நீங்கள் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருங்கள்
வாழ்க்கையில் நட்பு வட்டம் ரொம்ப முக்கியமானது. ஆனால் அதில் நல்லது எது, கெட்டது என பிரித்து பார்க்க வேண்டும். கேடு விளைவிக்கும் நோக்கில் யாராவது நட்புக் கரம் நீட்டினால் அப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் நலனுக்காக நண்பர்களை உருவாக்கி வாய்ப்பு கிடைக்கும் போது ஏமாற்றி தப்பித்து விடுகிறார்கள். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.