5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tiruchendur: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. 12 நாட்கள் நடக்கப்போகும் நிகழ்வுகள் என்னென்ன?

காலை 7மணிக்கு யாகபூஜை தொடங்கும் நிலையில் அன்று காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு நடைபெறும் யாக பூஜையில் தீபாராதனை காட்டப்படும். பின் 12.45 மணிக்கு வேல் வகுப்பு,வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அங்கு விசேஷ தீபாராதனை நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiruchendur: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா.. 12 நாட்கள் நடக்கப்போகும் நிகழ்வுகள் என்னென்ன?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Oct 2024 15:00 PM

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 2 ஆம் தேதி சாலை பூஜையுடன் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதம் வரும் சஷ்டி மிகவும் பிரசித்திப் பெற்றது. கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் இருக்கும் பட்சத்தில்  இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தான் கந்த சஷ்டி விழா மிகவும் பிரபலம். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  கலந்து கொள்வார்கள். நவம்பர் 12 ஆம் தேதி வரை கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது.

யாகசாலை பூஜை தொடக்கம்

இதுதொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கந்த சஷ்டி திருவிழா நவம்பர்  2 ஆம்தேதி காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.  தொடர்ந்து அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு  1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் வைபவம் நடைபெறும்.

காலை 7மணிக்கு யாகபூஜை தொடங்கும் நிலையில் அன்று காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு நடைபெறும் யாக பூஜையில் தீபாராதனை காட்டப்படும். பின் 12.45 மணிக்கு வேல் வகுப்பு,வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அங்கு விசேஷ தீபாராதனை நடக்கிறது.

இதனையடுத்து மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4  மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்படும். இதன்பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

Also Read: கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் முறை… வழிபாடு செய்வது எப்படி?

திருவிழா நிகழ்வுகள்

2 ஆம் நாள் திருவிழாவில் இருந்து 5 ஆம் திருவிழா வரை (நவம்பர் 3 முதல் 6 ஆம் தேதி வரை) நான்கு நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  3.30மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும்,  மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும். தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45மணிக்கு தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் சுவாமி எழுந்தருளுகிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் மாலை4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெறும். தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் நவம்பர் 7 ஆம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கும். காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கும் யாக சாலையில் தீபாராதனை காட்டப்படும். 12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் தீபாராதனைக்கு நடைபெற்ற பிறகு,  மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளுகிறார்.  சூரனை சம்ஹாரம் செய்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவிலில் சேரும் வைபவம் நடக்கிறது.அன்று 108 மகாதேவர் சன்னதி சாயாபிசேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

Also Read: TN Goverment Jobs: மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. அரசு மருத்துவமனையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

திருக்கல்யாணம்

விழாவின் ஏழாம் திருவிழாவான 8 ஆம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30 க்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், அன்று மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கோயில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

8 ஆம்திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம்பல்லக்கிலும் பட்டின பிரவேசம் நடக்கிறது. நவம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.12 ஆம்திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News