Tulsi Garland: துளசி மாலை அணிவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்..! - Tamil News | Tulsi Garland: Rules To Follow Before Wearing Tulsi Garland. | TV9 Tamil

Tulsi Garland: துளசி மாலை அணிவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!

Updated On: 

07 Jul 2024 22:38 PM

நம்முடைய முன்னோர்கள் காலத்திலிருந்து, உடலுக்கு நன்மையளிக்கும் துளசி மாலை, சந்தன மாலை உள்ளிட்ட பல விதமான மாலைகளை அணிந்து வருகின்றனர். இந்த மாலைகள் உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்சியளிக்கும் விதமாகவும் அணிகின்றனர். துளசி மாலை, சந்தன மாலை போன்ற மாலைகளை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக முன்னோர்களால் நம்பப்படுகிறது. அப்படி துளசி மாலை அணிவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காணலாம்.

Tulsi Garland: துளசி மாலை அணிவதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!

துளசி மாலை

Follow Us On

இந்து மதத்தில் துளசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. துளசியில் பல ஆயுர்வேத குணங்களைக் கொண்டுள்ளது. துளசியில் உள்ள பருவகால நோய்களுக்கான தீர்வாகப் பயன்படுகிறது. துளசி செடியை வீட்டில் அல்லது முற்றத்தில் வைப்பது அனைத்து கெட்ட சக்திகளையும் போக்க உதவுகிறது. புனிதமான துளசி செடியின் தண்டுகள் துளசி மாலையை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்து சடங்குகள் மற்றும் தியான நுட்பங்கள் அடிக்கடி துளசி மாலைகளைப் பயன்படுத்துகின்றன. செறிவு, நினைவாற்றல் மற்றும் ஆன்மீக தொடர்பு ஆகியவை இந்த புனித மாலை மேம்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. புனிதமான காந்தி மாலை அணிவதன் நன்மைகள் மற்றும் விதிகளைப் பார்ப்போம். துளசி மாலை அணிந்தவர்களை மகாவிஷ்ணு தன்னுடைய பாதுகாப்பில் வைத்து பாதுகாத்து அருள்வதாக ஐதீகமாக உள்ளது.

Also Read:  விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட பணிகள்… டப்பிங் தொடங்கிய ஃபகத் பாசில்!

துளசி மாலையை தொடர்ந்து அணிபவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிலர் துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல், மந்திர ஜபம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள். கழுத்தில் அணிவதாக இருந்தாலும் சரி, ஜபம் செய்வதற்காக துளசி மாலையை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, கடைசியில் இருந்து வாங்கி வந்தது உடன் துளசி மாலையை அணிவதற்கு முன் சில முக்கியமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நன்கு வளர்ந்த சிறிய துளசி செடியின் மரப்பட்டையைக் கொண்டு துளசி மாலை தயாரிக்கப்படுகிறது.  துளசி மாலை அணிவது உடலுக்கு குளிர்ச்சியையும்,  உஷ்ணத்தையும் அளிக்கிறது.  துளசி மாலையை அணிந்து கொண்டால் அனைத்து விஷயங்களிலும் வெற்றிகள் வருவதாக நம்பப்படுகிறது. துளசி மாலை அணிவதால் பாவங்கள் அழிவதுடன்,  பெருமாள் எப்போதும் நம்முடனேயே இருப்பார்.

Also Read: பாக்ஸ் ஆபிஸில் கொடிகட்டி பறக்கும் பிரபாஸின் கல்கி… 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

துளசி மாலை அணிவதற்கு முன், அதை விஷ்ணு படம் அல்லது சிலைக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.  துளசி மாலை அணியும் போதும் மூல மந்திரத்தை உச்சரிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. துளசி தேவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விஷ்ணு பகவானுடன் நெருங்கி இருக்க உதவியதற்காக, காயத்ரி மற்றும் சத்யோஜாத மந்திரங்களை அணிவதற்கு முன் எட்டு முறை சொல்ல வேண்டும் ஐதீகமாக உள்ளது.

துளசி மாலை அணிந்தவர்களை மகாவிஷ்ணு தன்னுடைய பாதுகாப்பில் வைத்து பாதுகாத்து அருள்வதாக ஐதீகம். துளசி மாலையை தொடர்ந்து அணிபவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிலர் துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல், மந்திர ஜபம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள். கழுத்தில் அணிவதாக இருந்தாலும் சரி, ஜபம் செய்வதற்காக துளசி மாலையை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, துளசி மாலையை அணிவதற்கு முன் சில முக்கியமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  துளசி மாலையை வாங்கி வந்த உடன் மஞ்சள் கலந்த நீரில் கலந்து,  கங்கை நீர் அல்லது சுத்தமான தண்ணீர் மற்றும் பஞ்ச கவ்யம் ஊற்றி அதை கழுவ வேண்டும். சுத்தமான துணியால் துடைத்து, பூஜை அறையில் உள்ள பெருமாளின் படத்திற்கு முன் வைத்து, வழிபட வேண்டும். அதற்கு பிறகே துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version