5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TV9 Festivals Of India: நவராத்திரி பண்டிகை.. கோலாகலமாக தொடங்கிய TV9 இந்தியாவின் திருவிழா!

Festival Of India: TV9 ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா என்ற பெயரில் துர்கா பூஜை கோலாலமாக தொடங்கி இருக்கிறது. டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவிற்கு பல நாடுகளில் இருந்து 250 க்கும் ‌ மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. TV9 நெட்வொர்க் ஏற்பாடு செய்த இந்த விழா அக்டோபர் 13 வரை நடைபெறும்.

TV9 Festivals Of India: நவராத்திரி பண்டிகை.. கோலாகலமாக தொடங்கிய TV9 இந்தியாவின் திருவிழா!
TV9 ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா திருவிழா திருவிழா தொடக்கம்…
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Updated On: 09 Oct 2024 17:27 PM

TV9 இந்தியாவின் திருவிழா: துர்கா பூஜையையொட்டி TV9  இந்தியாவின் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய லைஃப்ஸ்டைல் ​​எக்ஸ்போ டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பல நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. TV9 நெட்வொர்க்கின் இந்த விழா அக்டோபர் 13 வரை நடைபெறும்.

டிவி9 நெட்வொர்க் செய்தி இயக்குநர் ஹேமந்த் ஷர்மா கூறுகையில், ‘துர்கா பூஜை என்பது சக்தியைப் பயன்படுத்துவதற்கான திருவிழா, மக்களின் நலனுக்காக சக்தியை வணங்குகிறோம். TV9 நெட்வொர்க் என்பது நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மொழிகளிலும் TV9 இன் தடத்தை நீங்கள் காணலாம். இந்த திருவிழாவில் நீங்கள் முழு நாட்டின் பிரதிநிதித்துவத்தையும் காணலாம். இந்தப் பரந்த நாட்டின் முழு கலாச்சாரமும் சிதறி காணப்படுகிறது. அதை நாங்கள் பாதுகாக்கும் முயற்சி செய்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 13 வரை நிகழ்ச்சி

இந்தியாவின் TV9 விழா உற்சாகம், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்றது. இந்த திருவிழாவை 2024 அக்டோபர் 9 முதல் 13 வரை 5 நாட்களுக்கு புது டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே உள்ள மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் மற்றும் மறக்க முடியாத பொழுதுபோக்கு தருணங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை தர இருக்கிறது.‌ இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

இந்த இடத்திற்கு ஒருவர் உலகளாவிய வாழ்க்கை முறையை நேருக்கு நேர் வந்து பார்க்கலாம். திருவிழாவின் போது பிடித்ததை வாங்கிக் கொள்வதற்கு பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு சர்வதேச கண்காட்சிகள், சுவையான உணவு வகைகள், நேரடி இசை மற்றும் பல வகையான 250க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்டால்களில் உங்களால் பலவற்றை அனுபவிக்க கடந்த ஆண்டு இந்த திருவிழா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இம்முறை இந்த திருவிழா புதிய கோலாகலத்துடன் திரும்பி உள்ளது.

Also Read: Ayudha Puja: ஆயுதபூஜை கொண்டாடப்படுவது ஏன்? – எப்படி கொண்டாட வேண்டும்?

கலகலப்பான சிற்பங்கள், வசீகரிக்கும் அழகானங்கள் மற்றும் பக்தி இசை ஆகியவை பார்வையாளர்களை இந்த திருவிழாவின் உற்சாகத்தில் மூழ்கடிக்கும்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்:

பிரபலமான இந்த நிகழ்ச்சியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரே இடத்தில் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பும் தயார் செய்யப்பட்டுள்ளது. இது பூஜை சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமில்லாமல் இங்கு ஷாப்பிங் செய்து மகிழலாம். வாழ்க்கை முறை, ஃபேஷன், அழகு சாதன பொருட்கள் போன்ற பல்வேறு பொருள்களை இங்கு பார்த்து மகிழ்வதுடன் வாங்கிச் செல்லலாம்.

Also Read:TV9 Festival of India: மக்களே ரெடியா? இன்று தொடங்கும் டிவி9 துர்கா பூஜை திருவிழா.. 250 ஸ்டால்கள், இசை நிகழ்ச்சி என எல்லாம் ஒரே இடத்தில்..

அதுமட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர்களுக்கு தனித் தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதவிதமான ஆடைகள், ருசிகரமான உணவுகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒரே குறையின் கீழ் கொண்டு வருவது தான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம். இந்தியாவின் பன்முகத்தன்மை மட்டும் இன்றி 250 நாடுகளுக்கும்‌ மேற்பட்ட கலாச்சாரங்களை இங்கு நம்மால் பார்த்து மகிழ முடியும்.

நிகழ்ச்சி நிரல்:

  • 9 அக்டோபர் (மகாசஷ்டி): இரவு 8:00 மணிக்கு தேவி போதனை மற்றும் பந்தல் திறப்பு விழா.
  • 10 அக்டோபர் (மகா சப்தமி): நவபத்ரிகா பிரவேசம், சக்ஷுதன் ஆரத்தி மற்றும் மலர் பிரசாதத்துடன் கூடிய பூஜை ஏற்பாடு.
  • 11 அக்டோபர் (மகா அஷ்டமி): சோந்தி பூஜை மற்றும் போக் ஆரத்தி.
  • 12 அக்டோபர் (மகாநவமி): நவமி பூஜை மற்றும் பிரசாத விநியோகம்.
  • 13 அக்டோபர் (விஜயதசமி): வெண்முரசு விளையாடுதல் மற்றும் அம்மன் வழிபாட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.

இசை ஆர்வலர்களுக்கு நேரடி இசைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களால் நீங்கள் நிச்சயம் நடனமாட தூண்டப்படும் அளவுக்கு சூஃபி, பாலிவுட் ஹிட்ஸ் மற்றும் நாட்டுப்புற ட்யூன்கள் என உங்களுக்கு‌ பிடித்தமான அனைத்து இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். திறமையான கலைஞர்களோடு இது கலை கலாச்சாரத்தின் வண்ணமயமான மாலையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest News