Vaikasi Visakam 2024: வைகாசி விசாகம் அன்று இப்படி வழிபாடு பண்ணுங்க.. கைமேல் பலன் சேரும்.. - Tamil News | | TV9 Tamil

Vaikasi Visakam 2024: வைகாசி விசாகம் அன்று இப்படி வழிபாடு பண்ணுங்க.. கைமேல் பலன் சேரும்..

Updated On: 

21 May 2024 13:42 PM

Lord Murugan : முருகனிடம் கேட்டு கிடைக்காதது என்று எதுவுமே இல்லை என்பார்கள். வேலை, குழந்தைபாக்கியம், திருமணம், வீடு, நிம்மதி, அந்தஸ்து என கேட்டதை கேட்டபடி அள்ளித்தருபவன் முருகன். அதனாலேயே கோடி பக்தர்கள் அவர் சன்னதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Vaikasi Visakam 2024: வைகாசி விசாகம் அன்று இப்படி வழிபாடு பண்ணுங்க.. கைமேல் பலன் சேரும்..

முருகன்

Follow Us On

முருகன் : நாம் வணங்கும் கடவுள்களில் முருக பெருமானுக்கு என்றுமே தனியிடம் உண்டு. அவ்வளவு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லையென கூறுபவர்கள் கூட முருகன் பாடலை விரும்பி கேட்டு வைப் (vibe) செய்வதாக கூறுவது உண்டு. அத்தகைய முருகனுக்கு உகந்த தினமான வைகாசி விசாகம் நடப்பு ஆண்டில் வரும் 22-ஆம் தேதி வருகிறது. முழுமுதற் தமிழ் கடவுளான முருக பெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வைகாசி மாதத்தில் பௌர்ணமியும், விசாக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நன்னாளை வைகாசி விசாகமாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் முருகனை துதித்து பக்தியுடன் மக்கள் வழிபடுவது வழக்கம்.அதன்பேரில், வரும் 22-ஆம் தேதி காலை 8:18 மணி முதல் அடுத்த நாள் காலை 9:43 மணி வரை விசாக நட்சத்திரம் உள்ளது. இதனால், முருகனுக்கு விரதம் இருக்க வேண்டுமென கருதுபவர்கள், மே 22-ஆம் தேதி முருகனுக்கு விரதமிருந்து, பூஜை செய்யலாம்.

இவை மட்டுமின்றி, அன்றைய தினம் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அன்று முருகனை வழிபடுபவர்கள் இனிப்பு அப்பம் அல்லது தேன், தினை மாவை கலந்து முருகனுக்கு படைத்து வழிபடலாம். மேலும், விசாகத்தன்று முருகனை வழிபடுவதன் மூலம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

Also Read : பெட்ரூம், கிச்சன் எங்கு இருக்கவேண்டுமென தெரிந்துகொள்ளுங்கள்.

முருகனிடம் கேட்டு கிடைக்காதது என்று எதுவுமே இல்லை என்பார்கள். வேலை, குழந்தைபாக்கியம், திருமணம், வீடு, நிம்மதி, அந்தஸ்து என கேட்டதை கேட்டபடி அள்ளித்தருபவன் முருகன். அதனாலேயே கோடி பக்தர்கள் அவர் சன்னதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். உங்களுடைய வேண்டுதல்களும் இதே போல நிறைவேற வேண்டுமா? ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த ஒன்பது வாரம் முடிவதற்குள்ளேயே உங்கள் வேண்டுதல் முருகப் பெருமானால் நிறைவேற்றப்படும்.

முதலில் உங்கள் வேண்டுதல் என்னவோ அதை ஒரு காகிதத்தில் எழுதி, நான்காக மடித்து பூஜையறையில் வையுங்கள். பிறகு அந்த காகிதத்தை எடுத்துக்கொண்டு, வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று வள்ளி தெய்வானையோடு வீற்றிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்றுவாருங்கள். அப்படிப் போகையில் செவ்வரளி மாலை கட்டி எடுத்துச்செல்லுங்கள். இந்த மாலையை முருகனுக்கு சாத்திவிட்டு, 8 முறை வேண்டுதல் எழுதப்பட்ட காகிதத்துடன் பிரகாரத்தை சுற்றிவாருங்கள்.பிரகாரத்தை சுற்றும்போது மன ஒருநிலையோடு சுற்றவேண்டும். சுற்றிக் கொண்டிருக்கும்போதே 108 முறை ஓம் சரவண பவ எனும் மந்திரத்தை உச்சரியுங்கள். எட்டு முறை சாதாரணமாகவும், ஒன்பதாவது முறை அடிப்பிரதட்சனமாகவும் சுற்றுங்கள். ஒன்பது வாரம் இதை தொடர்ந்து செய்து வாருங்கள். வேண்டிய பலன் கைமேல் கிடைக்கும்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version