5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips: வீட்டில் ரோஜா செடிகளை இந்த திசையில் வைத்தால் பணம் கொட்டும்!

Rose Plant: ரோஜா என்றாலே அதனுடைய நிறமும், அதன் தோற்றமும் நம் கண்முன் வந்துபோகும். பலவகைகள் அதில் உள்ள நிலையில் பலரும் ரோஜா செடிகளை வீட்டில் வளர்ப்பார்கள். இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதனைச் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

Vastu Tips: வீட்டில் ரோஜா செடிகளை இந்த திசையில் வைத்தால் பணம் கொட்டும்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 31 Jul 2024 17:19 PM

வாஸ்து டிப்ஸ்: வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டக்கலையுடன் தொடர்புடைய ஜோதிடத்தின் ஒரு பகுதியாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் விதியால் எப்படி தீர்மானிக்கப்படுகிறதோ, அதே மாதிரி தான் நம்மை சுற்றி நடப்பவைகளும் கிரகங்கள் பெயர்ச்சி, வாஸ்து சாஸ்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கிறது. வாஸ்துவை பொறுத்தவரை நம் வீட்டில் ஒவ்வொரு பொருளும் எங்கு இருக்க வேண்டும் என்பது பற்றி கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அன்பின் சின்னமாக பார்க்கப்படும் ரோஜாப்பூவை வீட்டில் எங்கு வளர்க்க வேண்டும் என்பது பற்றி காணலாம். ரோஜா என்றாலே அதனுடைய நிறமும், அதன் தோற்றமும் நம் கண்முன் வந்துபோகும். பலவகைகள் அதில் உள்ள நிலையில் பலரும் ரோஜா செடிகளை வீட்டில் வளர்ப்பார்கள். இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதனைச் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Also Read: Vastu Tips: வீட்டுல இந்த செடிகளை மட்டும் வச்சிராதீங்க.. அப்புறம் அவ்வளவுதான்!

வாஸ்து சாஸ்திரப்படி ரோஜா செடிகளை வீட்டின் தென்மேற்கு திசையில் நட வேண்டும். இந்த திசை சிவப்பு பூக்களை நடுவதற்கு சிறந்த திசையாக கருதப்படுகிறது. இந்த திசையில் ரோஜா மரத்தை நடுவது வீட்டின் உள்ளவர்களின் சமூக கௌரவத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த செடி குடும்ப உறவுகளை வலுவாக வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும். சிவப்பு ரோஜா சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், வெள்ளை ரோஜாக்கள் அமைதியின் அடையாளமாக கருதப்படுகின்றன. எனவே, இந்த ரோஜா செடிகளை வளர்ப்பது வீட்டில் செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.

இறை வழிபாட்டில் ரோஜாப்பூ

மேலும் குடும்ப வாழ்க்கையில் யாருக்காவது பிரச்சனைகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லட்சுமி தேவிக்கு சிவப்பு ரோஜா பூக்களை வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது. இவ்வாறு செய்வதால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் லட்சுமி தேவியின் அருளால் எல்லாவிதமான பிரச்சனைகளும் விலகும்.

வாஸ்து சாஸ்திரத்தில், ரோஜா மலர் வரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜோதிடத்தில் இந்த ரோஜா பூ லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. ரோஜாக்களை வீட்டிற்குள் கொண்டு வருவது அழகு மட்டுமல்ல, வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், யாருக்காவது காதல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், வீட்டில் ரோஜாக்களை கொண்டு வருவதன் மூலம் தீர்வு காணலாம் என்று கூறப்படுகிறது.

Also Read: Technology Impact : இனி வங்கிகளில் கிளர்க் வேலை இல்லாமல் போய்விடும்.. ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

அதேசமயம் ரோஜா பூவில் மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்தால் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருந்த நிதி பிரச்சனைகள் நீங்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் துர்கா தேவிக்கு 5 வகையான ரோஜாப் பூக்களைச் சமர்பிக்க வேண்டும். இதன் மூலம் பணத் தட்டுப்பாடு விரைவில் தீரும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதை 11 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

Latest News