T20 World Cup Final: விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார் – கேப்டன் ரோகித் கருத்து - Tamil News | T20 World Cup final: Virat Kohli in good form - captain Rohit | TV9 Tamil

T20 World Cup Final: விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார் – கேப்டன் ரோகித் கருத்து

Updated On: 

28 Jun 2024 15:07 PM

விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். அவரது அதிரடியான ஆட்டத்திறன் இன்னும் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதையெல்லாம், இறுதிப்போட்டிக்காக விராட் கோலி பாதுகாத்து வைத்திருக்கிறார் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

T20 World Cup Final: விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார் - கேப்டன் ரோகித் கருத்து

விராட் - ரோகித்

Follow Us On

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 10 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள இந்திய அணியும், முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் சம பலம் வாய்ந்த அணிகளாக உள்ள நிலையில் நாளை நடைபெறும் போட்டி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்திய அணி கடைசியாக டி20 உலக கோப்பை தொடர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டான, 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த இந்தியா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

நேற்றைய போட்டியில் வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா கூறியுள்ளதாவது, எங்களுக்கு இந்த வெற்றி மன நிறைவை தருகிறது. இதற்காக நாங்கள் அணியாக இணைந்து கடும் உழைப்பை செலுத்தினோம். இந்த வெற்றியில் அணியில் இருக்கும் அனைவரின் பங்கும் உள்ளதாக தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடர் முழுவதும் நாங்கள் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடி வருகிறோம். தொடர்ந்து அடுத்த போட்டியிலும் நன்றாக விளையாடி கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம் என்று கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகக்குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வீழ்த்தினர். அக்சர் மற்றும் குல்தீப் என இருவரும் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இந்த டார்கெட்டை எதிரணிக்கு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் நான் எண்ணுவது உண்டு. அது குறித்து எங்கள் பேட்ஸ்மேன்களிடம் எதுவும் சொல்ல மாட்டேன். விராட் கோலி நல்ல ஃபார்மில் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். அவரது அதிரடியான ஆட்டத்திறன் இன்னும் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருபவருக்கு ஃபார்ம் ஒரு சிக்கலே இல்லை. அவரது தேர்ந்த ஆட்டம் இறுதிப் போட்டியில் வெளிப்படும் என நினைக்கிறேன்.

Also Read:வைரலாகும் CWC போட்டியாளர்களின் சம்பள விவரம்!

டி20 உலக கோப்பையை பொறுத்தவரை பதற்றம் கூடாது. இறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எண்ணுகிறேன். இதை தான் இந்த தொடர் முழுவதும் நாங்கள் செய்து வருகிறோம். எங்களால் முடிந்தவரை தொடர்ந்து முயற்சிப்போம் என ரோகித் தெரிவித்தார். டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியை தழுவியது. அதே போல் எதுவும் நடக்க கூடாது என்று இந்திய அணியின் ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version