Hardik pandya divorce: மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஹர்திக் பாண்டியா..! - Tamil News | Hardik Pandya officially announced his separation from his wife.. | TV9 Tamil

Hardik pandya divorce: மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஹர்திக் பாண்டியா..!

Updated On: 

18 Jul 2024 22:28 PM

காதல் மனைவி நடாஷாவை பரஸ்பரமாக பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடாஷா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து தங்களது மகன் அகஸ்தியாவை கவனித்துக் கொள்வோம் என்றும் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் தங்களது விவகாரத்து குறித்த செய்தியை வெளியிட்ட நிலையில், அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Hardik pandya divorce: மனைவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஹர்திக் பாண்டியா..!

ஹர்திக் - நடாஷா

Follow Us On

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா – செர்பியா நடிகையுமான நடாஷா இருவரும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்வதற்கு முன்னரே ஆண் குழந்தைக்கு தாய், தந்தையான இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். காதல் மனைவி நடாஷாவை பரஸ்பரமாக பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். நடாஷா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து தங்களது மகன் அகஸ்தியாவை கவனித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததற்குப் பின், நானும் நடாஷாவும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஒன்றாக இருப்பதற்கு எங்களால் முயன்ற அனைத்தையும் மேற்கொண்டோம். ஆனால், இதுவே எங்களுக்கு சிறந்த மற்றும் சரியான முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இது குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் தங்களது விவகாரத்தை அறிவித்துள்ளனர்.

Also Read: PF Balance : UAN இல்லாமல் பிஎஃப் பேலன்ஸ் செக் பண்ணலாம்.. இந்த சிம்பிள் டிப்ஸ்களை தெரிஞிசிக்கோங்க!

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ஹர்திக்பாண்டியா, துணை கேப்டன் என்ற பொறுப்புடனும், இந்திய உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனும் விளையாடி 2024 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். கிரிக்கெட் வீரர் கார்த்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவியின் நடாஷா ஸ்டான்கோவிக் இருவருக்கும் விவாகரத்து நடைபெற உள்ளதாக கடக சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிக்கு ஹர்திக் பாண்டியா மட்டும் சென்றிருந்தார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஆகிய இருவரின் சமூக வலைத்தள பக்கங்களிலும் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருந்தது இதனை தொடர்ந்து இருவரும் விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது. பிரிந்த நடாஷா தனது புதிய ஆண் நண்பருடன் சுற்றி வருவதாகவும் தகவல்கள் பரவின. அண்மையில் அம்பானி வீடு திருமண நிகழ்வில் பங்கேற்ற கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஆனால் ஹர்திக் பாண்டியா மட்டும் தனிமையில் இருந்தார். இதனை பார்த்த ஹர்திக் பாண்டியாவின் ரசிகர்கள் நடாஷாவை தீட்டி தீர்த்து வந்தனர்.

Also Read: IND vs SL: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… மீண்டும் அணியில் ரோகித், விராட்..!

ஹர்திக், நடாஷா ஜோடிக்கு திருமணத்திற்கு முன்னரே இருவருக்கும் அகஸ்தியா என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா – நடாஷா திருமணம் கடந்த 2020, மே 31 ஆம் தேதி நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த இருவரும் தற்போது விவாகரத்து பெற போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் உள்ளன. இதனை உண்மையாக்கும் விதமாக நடாஷா அவரது ஆண் நண்பர் ஒருவருடன் ஊர் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. பின்னர் இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த பாண்டியா என்ற குடும்பப் பெயரை நடாஷா நீக்கியது விவாகரத்து பிரச்சினைகள் பற்றிய உண்மை என நிரூபிக்கும் விதமாக அமைந்தது.

இதுகுறித்து நடாஷா வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது குணாதிசயங்களை விளக்குவதற்கு வாய்ப்பளிக்காமல் மற்றவர்களை மதிப்பிடுவதைப் பற்றிய சீரற்ற எண்ணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மக்களாகிய நாம் உண்மை பற்றி ஆராயாமல் எவ்வளவு விரைவாக தீர்ப்பளிக்கிறோம்.  யாரேனும் ஒருவர் தன்னிச்சையாக செயல்படுவதைக் கண்டால், நாம் நம்முடைய முடிவுகளை பயமில்லாமல் தெரிவித்துவருகிறோம் என்று அவர் பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகும் சர்ச்சை கருத்துகளுக்கு பதிலளித்திருந்தார்.

மேலும், ஹர்திக் அவருடைய பதிவில் கூறியுள்ளதாவது, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்த போது, மரியாதை மற்றும் தோழமை போன்றவற்றை நினைவில் கொண்டால், இது எங்களுக்கு கடினமான முடிவுதான். எங்கள் மகன் அகஸ்த்யாவை நாங்கள் இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வளர்ப்போம். இருவரது வாழ்விலும் மையமாக இருப்பார். அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் இயன்ற அனைத்தையும் வழங்க முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் எங்களுடைய தனிப்பட்ட உரிமைக்கு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் விவகாரத்து பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
Exit mobile version