5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

India Team: உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி.. உற்சாக வரவேற்பு!

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்ற நான்கு இடத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்திய அணி இன்று காலை சுமார் 6.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. தனிவிமானம் மூலம் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர். இந்தியா.. இந்தியா.. என முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

India Team: உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி.. உற்சாக வரவேற்பு!
இந்திய அணி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jul 2024 07:59 AM

தாயகம் திரும்பிய இந்திய அணி: அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்ற நான்கு இடத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்திய அணி இன்று காலை சுமார் 6.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. தனிவிமானம் மூலம் தாயகம் திரும்பிய வீரர்களுக்கு நள்ளிரவு முதல் டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர். இந்தியா.. இந்தியா.. என முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, வீரர்கள் தங்க உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர ஹோட்டலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி2 உலகக் கோப்பை இந்தியா மண்ணிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாக அடைந்தனர்.

Also Read: ஆர்சிபியில் மீண்டும் இடம்பெற்றார் தினேஷ் கார்த்திக்..!

தொடர்ந்து காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து இந்திய வீரர்கள் வாழ்த்து பெறுகின்றனர். அங்கிருந்து மும்பை வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய மாலை 5 மணிக்கு திறந்தவெளி பேருந்தில் வெற்றிப் பேரணியில் ஈடுபட உள்ளனர்.

தாயகம் திரும்ப தாமதாம் ஆனது ஏன்?


டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து, உடனடியாக இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், பார்படாஸில் திடீரென புயல் வந்தது. இதனால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், இரண்டு நாட்கள் பார்படாஸில் உள்ள ஹோட்டலில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெற்ற 4 நாட்களுக்கு பிறகு இந்திய அணி இன்று டெல்லி வந்தடைந்துள்ளது.

Also Read: இந்தியா உலக கோப்பையில் 1 ரன்னில் தோற்ற போது இரவு முழுவதும் அழுதேன் – கம்பீர்

Latest News