5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

விருதுநகரில் இளம்பெண் ஒருவர் லேப்டாப்பில் சார்ஜ் போட்டபடி பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி செந்தி மயில் (22). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ராஜாராம் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இளம்பெண் செந்தி மயில் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் செய்தப்படி பயன்படுத்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, மின்சாரம் தாக்கி அவர் மயக்கம் அடைந்துள்ளார்.

சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
உயிரிழப்பு (மாதிரிப்படம்)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Jun 2024 15:24 PM

இளம்பெண் உயிரிழப்பு: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் லேப்டாப்பில் சார்ஜ் போட்டபடி பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி செந்தி மயில் (22). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ராஜாராம் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இளம்பெண் செந்தி மயில் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் செய்தப்படி பயன்படுத்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, மின்சாரம் தாக்கி அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை செந்திமயிலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read: ஜூன் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

இளம்பெண் ஒருவர் லேப்டாப் பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே கோவையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  கோவை சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதா. மேற்படிப்பு (எம்.டி) இறுதி ஆண்டை முடித்து 25 நாட்கள் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்து வந்தார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெற வந்த இவர், அயனாவரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனது பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், பெண் மருத்துவர் சரணிதா தனது விடுதி அறையில் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்ற போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read: திருப்பத்தூரை அலறவிட்ட சிறுத்தை.. 11 மணி நேரத்திற்கு பிடிபட்டது எப்படி?

Latest News