நாய்க்குட்டி கடித்ததால் நடந்த விபரீதம்.. 23 வயது பெண் உயிரிழந்த சோகம்..
ரேபிஸ் நோய், மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோய் மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது - பொதுவாக நாய்கள், பூனைகள், குரங்குகள் மற்றும் ரக்கூன்கள் மூலம் பரவும்.
கோவையில் நாய்க்குட்டி கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 23 வயது பெண் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த பெண் தனது வீட்டு பக்கத்தில் இருந்த தெரு நாய்கள் நான்கினை வளர்த்து வந்துள்ளார். கடந்த மாதம் அதில் ஒரு நாய்க்குட்டி அந்த பெண்ணை கடித்துள்ளது. அந்த பெண் நாய் கடித்த பின் அவர் அருகில் இருக்கும் ஒரு கிளினிக் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அந்த பெண்ணிற்கு டெட்டனிஸ் ஊசி போடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக அவருக்கு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் இருந்து வந்ததை அவர் உணர்ந்தார். இது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் நோய் மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது – பொதுவாக நாய்கள், பூனைகள், குரங்குகள் மற்றும் ரக்கூன்கள் மூலம் பரவும்.
இது தொடர்பாக பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு, “ அந்த பெண் நாய்க்குட்டி கடித்த உடனே ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி போட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்படிருக்காது. கடைசி வரை அந்த பெண் இதனை கவனித்தில் கொள்ளாமல் இருந்தது தான் அவரது இறப்பிற்கு காரணம்” என தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் ரேபிஸ் நோய்த் தொற்று சந்தேகத்தின் காரணமாக நேற்று உயிரிழந்தார்.ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த இவர் ஒரு மாதத்திற்கு முன்பு நாய் கடியால் பாதிக்கப்பட்டு இறந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போடப்படவில்லை. நோயாளி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டதாகவும், அதே நாளில் அவர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read: ”யூனியன் பிரதேசத்தின் நிலை தற்காலிகமானது” – ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்ற உமர் அப்துல்லா..
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், “ஹைட்ரோபோபியா, ஏரோபோபியா, மூளையழற்சி மற்றும் ரேபிஸின் பிற அறிகுறிகளுடன் நோயாளி அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு அவர் காலில் நாய் கடியால் பாதிக்கப்பட்டார், நோயாளியின் மருத்துவ பதிவுகளின்படி அவருக்கு தடுப்பூசி போடப்படவில்லை, ”என தெரிவித்துள்ளார்.
அந்த நபர் வெறிநாய்க்கடியின் பொதுவான அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், ஆய்வகப் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, இது வெறிநோய் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர் திறந்த காயத்தில் நுழையும் போது ரேபிஸ் வைரஸ் உடலில் நுழைகிறது. இது நரம்புகள் வழியாக உங்கள் மைய நரம்பு மண்டலத்தில் மிக மெதுவாக நகர்ந்து பாதிக்கும். இது உங்கள் மூளையை அடையும் போது, நரம்பியல் சேதத்தை ஏற்படுத்துகிறது.