Accident : அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்.. ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்! - Tamil News | 5 died and 2 severely injured after car collide with government bus in Rameshwaram | TV9 Tamil

Accident : அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்.. ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Published: 

08 Sep 2024 08:19 AM

5 Died | கடந்த சில நாட்களுக்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பெண்கள் உடபட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாமபாம உயிரிழந்தனர்.

Accident : அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்.. ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

ராமேஸ்வர சாலை விபத்து : பொதுவாக காலை நேரங்களில் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும். காரணம், இரவு முழுவதும் கண் விழிந்து வாகனம் ஓட்டும் நிலையில், விடியற்காலையில் சற்று தூக்கம் வரும். அந்த நேரங்களில் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இவ்வாறு தூக்க கலக்கம், காலை நேர பனிப்பொழிவு மற்றும் அசதி காரணமாக விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : TVK Party : தவெகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்?.. முதல் மாநாடு எப்போது?.. இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் நடிகர் விஜய்..

அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

ராமேஸ்வரம் பிரப்பன்வசலை என்ற பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று சாலையோரம் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார், பேருந்தின் மீது மோதி கடும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க : Today’s Top News Headlines: உங்களை சுற்றி நடந்தது என்ன? – இன்றைய முக்கிய செய்திகள்!

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேர்

இந்த கோர விபத்தின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : விசாரணை வளையத்தில் மகாவிஷ்ணு.. சென்னையில் காலடி எடுத்து வைத்தவுடன் கைது செய்த போலீஸ்..

சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்களுக்கு நிகழ்ந்த பரிதாபம்

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானதில், பெண்கள் உடபட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாமபாம உயிரிழந்தனர். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version