5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OS Maniyan Car Accident: விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்.. ஓ.எஸ் மணியனுக்கு என்னாச்சு?

நாகப்பட்டினம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது கார் கோயில் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் ஓ.எஸ் மணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

OS Maniyan Car Accident: விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்.. ஓ.எஸ் மணியனுக்கு என்னாச்சு?
விபத்தில் சிக்கிய மாஜி அமைச்சர்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Oct 2024 17:02 PM

நாகப்பட்டினம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது கார் கோயில் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் ஓ.எஸ் மணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இவர் இன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் திருப்பூண்டி கரைநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு இருசக்கர வாகனம் குறுக்கில் வந்தது. இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை வளைத்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள கோயில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன் பக்க பகுதி சேதம் அடைந்தது. ஓ.எஸ் மணியன் மற்றும ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு மருத்தவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அன்பழகன் என்பவரும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read: ஆயுத பூஜைக்கு ஊருக்கு போக ரெடியா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. எந்தெந்த ரூட் தெரியுமா?

அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்  விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யார் இந்த ஓ.எஸ்.மணியன்?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஓரடியம்புலம் பகுதியைச் சேர்ந்தவர் ஓ.எஸ்.மணியன். இவர் சிறு வயது முதலே அரசியல் ஆர்வம் உள்ளனர். இவர் தனது 18 வயதிலேயே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். இதன் பிறகு பல்வேறு பதவிகளையும் அலங்கரித்தார்.

அதன்படி, ஒன்றியச் செயலாளர், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர், மாவட்ட கழக செயலாளர் என கடசி பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தத காலத்தில் இவர் பேசியது இன்றளவும் அதிமுக நிர்வாகிகளால் பெருமையாக பேசப்படுகிறது.

அதனை தலைமை கழக பேச்சாளர்களின் பொற்காலம் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு தனது பேச்சால் நிர்வாகிகளை கவர்ந்திருக்கிறார். மேலும், இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மயிலாடுதுறை எம்.பியாக இருந்துள்ளார்.  2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் அப்போது கைத்தறித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.

Also Read: ரூ.4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வருதா? இனி இப்படிதான் கட்டணும்.. மின்வாரியம் அதிரடி!

2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதே வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். இந்த நிலையில், இவர் இன்று காலை கார் விபத்தில் சிக்கினார். இதனை அடுத்து சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Latest News