5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மூட நம்பிக்கை.. ஒரு மாத பேரனை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாத்தா.. அரியாலூரில் ஷாக்!

Ariyalur Crime : அரியலூர் மாவட்டத்தில் தன் மகளுக்குப் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை மூட நம்பிக்கை காரணமாக தண்ணீரில் மூழ்கடித்து தாத்தாவே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மகளுக்கு சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்ததால் வீட்டில் இருக்கும் ஆண் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கூறியதால் உயிருக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் விசாரணையின் போது தாத்தா வீரமுத்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

மூட நம்பிக்கை.. ஒரு மாத பேரனை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாத்தா.. அரியாலூரில் ஷாக்!
அரியலூரில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாத்தா
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 18 Jun 2024 13:18 PM

அரியலூர் பச்சிளம் குழந்தை கொலை சம்பவம்: அரியலூர் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் பிறந்த ஆண் குழந்தையால் உயிருக்கு ஆபத்து என கருதி தாத்தாவே பச்சிளம் குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய் அருகில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தேடி பார்த்தப்போது வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் பேரலில் சடலமாக குழந்தை மீட்கப்பட்டு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, தாத்தா வீரமுத்து பேரனை கொலை செய்தது தெரிய வந்தது. சித்திரை மாதத்தில் பிறந்த ஆண் குழந்தையால் வீட்டில் இருக்கும் ஆண் உயிருக்கு ஆபத்து என கூறியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து – ரேவதி தம்பதியினர். இவர்களின் மகள் சங்கீதாவை கும்பகோணத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் மகள் சங்கீதாவிற்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. அந்த குழந்தைக்கு சாத்விக் என பெயர் வைத்துள்ளனர். பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் உள்ள தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார்.

Also Read : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. யாருக்கு ஆதரவு? த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

கடந்த 14ம் தேதி காலை சங்கீதா எழுந்து பார்த்தபோது, தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தேடி பார்த்ததில் வீட்டுக்கு பின்புறம் இருந்த  தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்த கிடந்துள்ளது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தையின் இறப்பு குறித்து வீட்டில் உள்ளவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. குறிப்பாக தாத்தா  வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசிய தாத்தா வீரமுத்துவை போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒப்புக்கொண்டுள்ளார். குழந்தையை கொன்றதற்கான காரணம் குறித்து தாத்தா அளித்த வாக்குமூலத்தை அறிந்து போலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மூட நம்பிக்கையால் குழந்தையை கொன்ற தாத்தா

மகள் சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற்கனவே நிறைய கடன் வாங்கிய நிலையில், குழந்தை பிறந்ததால் அதற்கு சீர் செய்ய கடன் வாங்கியதாலும், விரக்தியில் இருந்ததாக வீரமுத்து கூறியுள்ளார். இந்த சூழலில் சித்திரை மாதம் பிறந்த பேரனால் குடும்பத்தின் ஆண் உயிருக்கு ஆபத்து என்று கிராம மக்களும், உறவினர்களும் தெரிவித்ததாலும், வீட்டில் தன்னை தவிர ஆண் மகன் இல்லாததால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என நினத்து குழந்தையை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கேயாவது விட்டு விட்டு வந்துவிடலாம் என்று எண்ணியதாகவும், உயிர் ஆசையால் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அதிகாலை குழந்தையை தூக்கிக் கொண்டு தண்ணீர் நிரம்பிய பேரலில் மூழ்கடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார்.

வீட்டில் எழுந்து அனைவரும் குழந்தையை தேடும் போது, தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என தானும் குழந்தையை தேடுவது போல் நாடகமாடியாதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தாத்தா வீரமுத்துவின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு ஜெயங்கொண்டம் போலிசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் உட்கோட்டை வீட்டில் வைத்து வீரமுத்து குழந்தையை எப்படி கொன்றார் என்பதை சாட்சிகள் முன்னிலையில் நடித்துக் காட்டி, போலீசார் வீடியோ பதிவு செய்தனர். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு மூடநம்பிக்கையின் காரணமாக உயிருக்கு ஆசைப்பட்டு தாத்தாவே பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest News