5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Armstrong Murder : 6 மர்ம நபர்கள்.. சரமாரி வெட்டு.. சென்னையில் பகீர் கிளப்பிய ஆம்ஸ்ட்ராங் கொலை!

Armstrong Murder | பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை, பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தனது வீட்டிற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த அவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Armstrong Murder : 6 மர்ம நபர்கள்.. சரமாரி வெட்டு.. சென்னையில் பகீர் கிளப்பிய ஆம்ஸ்ட்ராங் கொலை!
ஆம்ஸ்ட்ராங்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 05 Jul 2024 22:57 PM

ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை : பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இந்நிலையில் இன்று (05.07.2024) சென்னை, பெரம்பூரில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த நிலையில், உணவு டெலிவரி செய்பவர்களை போல இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரிய வெட்டியது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங், மீட்டுகப்பட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கூறி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டி கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

பரபரப்பில் சென்னை

சென்னை, பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட செம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலை அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நகரமே பரபரப்பாக காணப்படுவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கு.. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு..!

அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை, பெரம்பூரில் அரசியல் கட்சி தலைவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையின் பரபரப்பான பகுதியில் அரசியல் கட்சி தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News