5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சாலையோரம் இருந்த மக்கள் மீது ஆசிட் வீச்சு.. இரவில் சென்னையை உலுக்கிய கொடூர சம்பவம்!

Chennai Acid Attack: சென்னை ஈக்காட்டுதாங்கள் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று இரவு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசியதால் அங்கிருந்த மக்கள் அலறி துடித்துள்ளனர். ஆசிட் வீச்சால் அங்கிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என மொத்தம் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஒரு குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சாலையோரம் இருந்த மக்கள் மீது ஆசிட் வீச்சு.. இரவில் சென்னையை உலுக்கிய கொடூர சம்பவம்!
சென்னையில் ஆசிட் வீச்சு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 May 2024 07:44 AM

சென்னையில் ஆசிட் வீச்சு: சென்னை ஈக்காட்டுதாங்கள் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் எப்போது இருப்பார்கள். இவர்கள் இரவு அங்கு தூங்குவது வழக்கம். இந்த நிலையில், நேற்று பொதுமக்கள் பலரும் ஈக்காட்டுதாங்கள் மெட்ரோ ரயில் அருகே சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் அவர்கள் மீது ஆசிட்டை வீசி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறனர். ஆசிட் வீசியதால் அங்கிருந்த மக்கள் அலறி துடித்துள்ளனர். ஆசிட் வீச்சால் அங்கிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என மொத்தம் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஒரு குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

5 பேர் காயம்:

மேலும், அங்கிருந்த மக்களுக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனை அடுத்து, தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மக்களுக்கு அந்த நபருக்கு என்ன தொடர்பு? என்ன காரணம் ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : ”அதிகனமழை” தமிழகத்தில் மழை கொட்டப்போகுது… எந்தெந்த மாவட்டங்கள்?

Latest News