5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Crime News: சிறுமியை திருமணம் செய்ய நினைத்த பெண் பயிற்சியாளர்.. கடத்தல் வழக்கில் திடுக் வாக்குமூலம்!

சென்னையில் 16 வயது சிறுமியை பெண் ஒருவர் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai Crime News: சிறுமியை திருமணம் செய்ய நினைத்த பெண் பயிற்சியாளர்.. கடத்தல் வழக்கில் திடுக் வாக்குமூலம்!
மாதிரிப்படம் (picture credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Oct 2024 20:15 PM

சென்னையில் 16 வயது சிறுமியை பெண் ஒருவர் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மேலும், இவர் பெரம்பூரில் உள்ள கராத்தே பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வந்தார். அங்கு 27 வயதான பெண் ஒருவர் அவருக்கு பயிற்சி அளித்து வந்திருக்கிறார்.

16 வயது சிறுமியை கடத்திய பெண்

இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி கராத்தே பயிற்சி வகுப்பிற்கு சென்ற சிறுமி, நீண்ட நேரமாகிவும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் வி.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமி பயிற்சி பெற்ற கராத்தே பயிற்சி மையத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டார். அதில், சிறுமிக்கு கராத்தே பயிற்சி கொடுத்த 27 வயதான பெண் பயிற்சியாளர் கடத்தி சென்றது தெரியவந்தது.

Also Read: இரண்டு நாட்களுக்கு கனமழை அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை

இதனால் அந்த பெண்ணின் செல்போன் நம்பரை டிராக் செய்து அவரது இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தது. அதில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரில் அவர் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர்.

விசாரணையில் திடுக் தகவல்:

மேலும், அந்த பெண்ணையும் கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் பெண் கராத்தே பயிற்சியாளர். இவர் தன்னிடம் பயிற்சி பெற்ற வந்த 12ஆம் வகுப்பு மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இதற்கிடையில், அந்த பெண் கராத்தே பயிற்சியாளர் ஆணாக மாற முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக வடமாநிலத்தில் வடமாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் திட்டமிட்டிருந்தார். அதன்பிறகு மாணவியை திருமணம் செய்யவும் முடிவு எடுத்து இருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய் 3வது முறையாக கடிதம்!

இதற்காக 16 சிறுமியை அந்த பெண் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  திருமணம் செய்வதற்காக 12 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News