5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

Power Cut | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை (27.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அடையாறு, அஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

Chennai Powercut: சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!
சென்னை மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Aug 2024 06:19 AM

மின்தடை: சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்திற்கு மின்தடை நிறுத்தப்படுகிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.  தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Also Read: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 13 வாகனங்கள்.. 5 பேர் பலியான நிலையில் 10 பேர் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்!

பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை (26.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அம்பத்தூர், செம்பரக்கம் மற்றும் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்படுகிறது.

எந்தெந்த இடங்கள்?

அம்பத்தூர் :

அம்பத்தூரில் எஸ் அண்ட் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசென்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி ரோடு, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ் & பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி ஃபேஸ் I & II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, எருளார் காலனி, எட்டீஸ்வரன் கோயில் தெரு, செட்டி பிரதான தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.

செம்பரக்கம் :

செம்பரக்கம் பகுதிகளில் முழு நசரத்பேட்டை பகுதி, மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூரு டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரம்மேல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.

Also Read: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்..விபரீத முடிவு எடுத்த காதல் ஜோடி.. சோக சம்பவம்!

ரெட்ஹில்ஸ் :

ரெட்ஹில்ஸ் பகுதிகளில் பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பகா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதிய 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.

Latest News