Chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ! - Tamil News | | TV9 Tamil

Chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!

Updated On: 

19 Jul 2024 07:33 AM

சென்னையில் மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!

சென்னையில் மின்தடை

Follow Us On

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (19.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தண்டையார்பேட்டை, நெற்குன்றம், அடையாறு  ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

எந்தெந்த இடங்கள்?

தண்டையார்பேட்டை:

மீஞ்சூர் டவுன், டி.எச்.ரோடு, மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், அத்திப்பட்டு, ஜி.ஆர்.பாளையம். , பள்ளிபுரம். வழுதிகைமேடு, கரையன்மேடு ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Also Read: பெண் குழந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி வாக்குமூலம்!

நெற்குன்றம்: 

ரமணியம் அடுக்குமாடி குடியிருப்புகள், போன் மில், எல்எஸ் மருத்துவமனை, பெருமாள்கோயில் தெரு, எ.வி.கே. தெரு, அருள்மிகு மீனாட்சி நகர், அழகம்மாள் நகர், பால்வாடி தெரு, நேதாஜி அவென்யூ, சக்திநகர், திருவள்ளூர் தெரு, கருணீகர் தெரு, பீப்பிள்ஸ் பிளாட், பிஎச் சாலை ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

அடையாறு:

பெசன்ட் நகர், மாளவியா அவென்யூ, சாஸ்திரி நகர் 1 முதல் 4வது தெரு, சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்ரமணியம் காலனி, 1 முதல் 3வது தெரு, மாளவியா அவென்யூ, எம்ஜி சாலை, ஆர்.கே.நகர் பிரதான சாலை, 1 முதல் 3வது குறுக்குத் தெரு, ஆர்.கே.நகர், மருந்தீஸ்வர்நகர், சுன்னம்புகால்வாய், காமராஜர்நகர், ஆர்.பி.ஐ. காலனி, 1வது பிரதான சாலை சாஸ்திரிநகர், 6வது குறுக்குத் தெரு சாஸ்திரிநகர், 1வது குறுக்குத் தெரு சாஸ்திரிநகர், சங்கம் காலனி, பாலவாக்கம், பி.ஆர்.எஸ்.நகர், பரஹிதாசன் தெரு, பாரதி நகர், பள்ளித் தெரு ஒரு பகுதி, ஏ.எம்.பி. வைத்தியர் தெரு, மா போ செ.தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, அன்பழகன் தெரு, நாராயணசாமி தெரு, பாரதியார் தெரு, குவைட் இ-மில்லத் தெரு, VOC தெரு, சுந்தரமூர்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன்கோயில் தெரு, பூங்கா தெரு, அமரநந்தா வில்லா, பாஸ் அவென்யூ. , ஜெயசங்கர்நகர் முழுப் பகுதி மற்றும் வைகோசாலை  ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.  இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

Also Read: தொடர்ந்து கொட்டும் கனமழை.. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்?

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version