Chennai Power cut: சென்னையில் இன்று மின்தடை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா? - Tamil News | | TV9 Tamil

Chennai Power cut: சென்னையில் இன்று மின்தடை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

Updated On: 

01 Jul 2024 06:07 AM

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Chennai Power cut: சென்னையில் இன்று மின்தடை... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

மின்தடை

Follow Us On

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று  (01.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அம்பத்தூர், போரூர் ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

எந்தெந்த இடங்கள்?

சென்னையில் அம்பத்தூர், போரூர் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 1) காலை 9 மணி முதுல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அம்பத்தூர் பகுதியில் மகாலட்சுமி நகர், சுந்தர சோழபுரம், ராம்நகர், சுந்தர விநாயகா நகர், லோட்டஸ் அவென்யு, சின்ன கோலடி, செல்லியம் மன் நகர், தேவி நகர், நோவா அப்பார்ட்மென்ட், சுமங்கலி மானசரோவர் அப்பார்ட்மென்ட்ஸ், பாபா நகர், ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், ஐஸ்வந்த் நகர் பேஸ் 1, பேஸ் 2, ரெட்டிபாளையம் சாலை, மீனாட்சி அவென்யு, அண்ணாமலை அவென்யு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதுல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

போரூர் பகுதியில் ஆவடி சாலையில் ஒரு பகுதி, மேட்டு தெரு, அம்பாள் நகர், வாணியர் தெரு, பூந்தமல்லி புறவழிச்சாலை, எஸ்.எஸ்.கோயில் தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதுல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

Also Read: 2 மாவட்டங்களில் பிச்சு உதறபோகுது மழை… வானிலை மையம் எச்சரிக்கை!

 

 

 

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version