Chennai Power cut: சென்னையில் இன்று மின்தடை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை (18.06.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை போரூர், அடையாறு, பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், வியாசர்பாடி, அம்பத்தூர், எழும்பூர், ஆவடி ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.
Also Read: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்.. நோட் பண்ணிக்கோங்க!
எந்தெந்த இடங்கள்?
போரூர் பகுதியில் கெருகம்பாக்கம், மல்டி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாலாஜி நகர், ஜெயராம் நகர், பச்சையம்மன் நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர்.நகர், பெருமாள் நகர், லீலாவதி நகர், லட்சுமி நகர், திருமுடிவாக்கம், பாவேந்தர் நகர், இந்திரா நகர், ராம்தாஸ் நகர், லட்சுமி நகர், கோவூர், குன்றத்தூர் மெயின் ரோடு, மேற்கு மாட வீதி, கீழக்கு மாட வீதி, தர்ம ராஜா, கோவூர் காலனி, அம்பாள் நகர், பட்டூர் பஜார் தெரு, வாலாஜி தெரு, இசாக் நகர், பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அடையாறு பகுதியில் பெசன்ட் நகர், வால்மீகி நகர், சாஸ்திரி நகர் பிரிவு, முதல் கடல் வார்டு ரோடு, 3வது கடல் வார்டு ரோடு, பாலகிருஷ்னா ரோடு, ஜெயராம் நகர், குப்பம் பிச் ரோடு, கொட்டிவாக்கம், கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, திருவள்ளூவர் நகர், சவுத்லாக் தெரு, பரிசியன் கல்லூரி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பல்லாவரம் பகுதியில் ராதா நகர், கடப்பேரி, ஜிஎஸ்டி ரோடு, பார்வதி ஹல்பிடல், கட்லாஞ்சாவடி, நேரு நகர், புதிய காலணி 15 முதல் 16வது தெரு வரை, வெங்கட்ராமன் நகர், ராஜ கீழ்பாக்கம், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பஜனை கோயில் தெரு, வைத்திர கார தெரு, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
சோழிங்கநல்லூர் பகுதியில் மேடவாக்கம், பெரும்பாக்கம், நேசமணி நகர், நுக்கம்பாளையம் மெயின் ரோடு, மல்லிஸ், கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, காமாகோடி நகர், மேற்கு அண்ணா நகர், பள்ளிக்கரணை ஏரியா பகுதி, எஸ்.கொளத்தூர், விடுதலை நகர், விநாயகபுரம், மகாலியம்மன் கோயில், சித்தாலப்பாக்கம், மணப்பாக்கம் மெயின் ரோடு, வள்ளூவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தாம்பரம் பகுதியில் ராதாநகர், வீரபத்தி நகர், காமராஜ் தெரு, ஜெயலட்சுமி தெரு, காந்தி நகர், நேரு நகர், ராதா நகர், ஐயப்பசாமி பள்ளி தெரு, அல்சா கிரிண் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.
Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு கொட்டப்போகுது மழை.. எங்கெல்லாம் தெரியுமா?