5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க!

மின்தடை: சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. போரூர், திருமுல்லைவாயல், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. எனவே உங்களது பணிகளை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள். மேலும், மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும்.

Chennai Powercut: சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா இருக்கானு பாருங்க!
மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Sep 2024 19:37 PM

மின்தடை: சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. போரூர், திருமுல்லைவாயல், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. எனவே உங்களது பணிகளை அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.  தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

அந்த வகையில் செபடம்பர் 13 ஆம் தேதியான நாளை, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சென்னையில் போரூர், திருமுல்லைவாயல், கும்மிடிப்பூண்டிஉள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: களையிழந்த ஓணம் பண்டிகை.. தமிழ்நாடு பூ வியாபாரிகளுக்கு நஷ்டம்.. அச்சச்சோ!

எந்தெந்த பகுதிகள்?

போரூர்:

ஐயப்பந்தாங்கல், ஆர்ஆர் நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கத்தின் ஒரு பகுதி, போரூர் தோட்டம் (கட்டம் I மற்றும் II), ராமசாமி நகர், நகர்ப்புற மரம், ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் தோட்டம், ஜிகே எஸ்டேட், சின்ன போரூர், வானகரத்தின் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியராகரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

நாப்பாளையம்:

மணலி புதிய நகரம், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐஜே புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர, வெள்ளிவயல், நாபாளையம், இடையஞ்சாவடி, வெள்ளிவயல், சாவடி கொண்டகரை, ஏக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், எம்ஆர்எஃப் நகர், சுப்ரமணி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.

திருமுல்லைவாயல்:

செந்தில் நகர், காளிகாம்பாள் நகர், அர்ஜுனா நகர், ஸ்ரீநகர், காலனி சீனிவாச நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.

Also Read: 2 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்.. 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை..

கும்மிடிப்பூண்டி:

HT நுகர்வோர், கனிஷ்க், அருண் ஸ்மெல்டர்ஸ், செஞ்சுரி ப்ளைவுட், மிட்சுபா LT நுகர்வோர், எளவூர் பஜார், சுன்னம்புகுளம், பெத்திக்குப்பம், கயிலர் மேடு, ஆரம்பாக்கம், பஜார், நொச்சிக்குப்பம், எழுமதுரை, எடுர், கும்ப்ளி தோக்கமூர் தண்டலம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. மேற்கண்டு குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால், கீழ்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

கோவை:

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌதிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி, மீனா எஸ்டேட், உடையம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. கோவில்பாளையம், குரும்பாளையும், குன்னத்தூர், கல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

 

Latest News