Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எங்கே தெரியுமா? - Tamil News | chennai powercut 16 august 2024 manali adayar tangedco official release | TV9 Tamil

Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எங்கே தெரியுமா?

பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (16.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மணலி, அடையாறு ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.

Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எங்கே தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

16 Aug 2024 07:33 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (16.08.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மணலி, அடையாறு ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.


சென்னையில் எங்கே மின்தடை?

மணலி : நெடுஞ்செழியன் சாலை, கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், பட சாலை தெரு ஒரு பகுதி, வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி, எலந்தனூர், பொன்னேரி உயர் சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்எம்டிஏ கட்டம்-I & II, துவாரகா நகர், ஆண்டார்குப்பம் சோதனைச் சாவடி, ஏசிசி மெயின் ரோடு, மெட்டல் & இந்தோ டெக், சாத்தங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், வி.பி. நகர், பெரியதோப்பு, சின்னமாத்தூர் சாலை, VOC நகர், புதுக்கோயில் தெரு, சந்தானகிருஷ்ணன் சாலை, விமலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வெட்டு செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: பிஎஸ்என்எல் 4ஜி சிம் ஆக்டிவேட் செய்வது எப்படி? .. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

அடையாறு: காந்தி நகர் (பகுதி), கால்வாய் வங்கி சாலை, காந்தி நகர் 2வது பிரதான சாலை, 3வது கால்வாய் குறுக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் மட்டுமல்லாது,  ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான வீட்டு வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!