5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?

சென்னை மின்தடை: சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அனகபுதூர், கிண்டி, சிப்காட், பொன்னேரி, அடையாறு, ரெட் ஹில்ஸ், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது.

Chennai Powercut: சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Sep 2024 19:02 PM

சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அனகபுதூர், கிண்டி, சிப்காட், பொன்னேரி, அடையாறு, ரெட் ஹில்ஸ், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.

மின்தடை:

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு… வெளியான ரீல்ஸ்.. ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 21ஆம் தேதியான நாளை, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அனகபுதூர், கிண்டி, சிப்காட், பொன்னேரி, அடையாறு, ரெட் ஹில்ஸ், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

எந்தெந்த ஏரியா?

அனகபுதூர்:

பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் 30 அடி சாலை, பாலாஜிநகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, தவதோஸ் சாலை ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

கிண்டி:

இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5 வரை, ஏ,பி,சி & டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு பகுதி, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

சிப்காட்:

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் கங்கன் தொட்டி பகுதி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது

பொன்னேரி:

பொன்னேரி, வெள்ளோடை, என்ஜிஓ நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்.,பாளையம், வெம்பாக்கம் அனுப்பம்பட்டு, தேவசம்பேடு, அக்கரம்பேடு, அக்கரம்பேடு, அக்கரம்பேடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அடையாறு:

பாலவாக்கம், பிஆர்எஸ் நகர், பாரதிதாசன் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு, பள்ளி தெரு, வைத்தியர் தெரு, ம.பொ.சி. தெரு, சுப்புராயன் தெரு, மசூதி தெரு, VOC தெரு, பாஸ் அவென்யூ, பாலவாக்கம் குப்பம், சீஷெல், செர்ரி, சைத்தான் அவென்யூ, வி.ஜி.பி., சங்கராபுரம் அவென்யூ, எம்.ஜி.ஆர்., சாலை, சின்ன நீலாங்கரை குப்பம், ரேடியோ காலனி கொட்டிவாக்கம் ஜர்னலிஸ்ட் காலனி, சீனிவாசபுரம், நியூ பீச் ரோடு. , காவேரி நகர் 1 முதல் 6 தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர், கொட்டிவாக்கம் குப்பம், ஈசிஆர் சாலை மருந்தீஸ்வரர் கோயில் வரை, பல்கலை நகர் சாஸ்திரி நகர் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாடி சாலை, ரங்கசாமி அவென்யூ, சீவார்ட் சாலை 1 முதல் 4 வது தெரு, பாலகிருஷ்ணா நெடுஞ்சாலை, வால்மீகி நகர், கலாசேத்ரா சாலை, சிஜிஐ காலனி, போலீஸ் குடியிருப்பு, திருவீதியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Also Read: மூளையை வறுத்து சாப்பிட்ட சைக்கோ கொலையாளி.. பெண் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் வாக்குமூலம்.. கலங்கிய போலீஸ்!

ரெட்ஹில்ஸ்:

ஜே.ஜே.நகர், ஆர்.ஆர்.குப்பம், திருத்தங்கரையன்பட்டு, சோத்துப்பாக்கம் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

முடிச்சூர்:

சக்தி நகர், ராயப்பா நகர், செல்வா நகர், அஷ்டலட்சுமி நகர், அமுதம் நகர், விஜயா நகர், வி.எம்.கார்டன், கலர் ஹோம்ஸ், ஏ.என்.காலனி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Latest News