5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Rains: சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை மையம் தகவல்!

Tamilnadu Weather Update: சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பல இடங்களில் சூறைக் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும், இரவு நேரத்தில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று நள்ளிரவு சுமார் 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல்லாவரம், ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், செங்கல்பட்டு, எழும்பூர், கிண்டி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Chennai Rains: சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை.. எத்தனை நாட்களுக்கு தொடரும்? வானிலை மையம் தகவல்!
சென்னையில் மழை (கோப்புப்படம்)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Jun 2024 07:08 AM

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை: சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பல இடங்களில் சூறைக் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும், இரவு நேரத்தில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று நள்ளிரவு சுமார் 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல்லாவரம், ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், செங்கல்பட்டு, எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம், திருவொற்றியூர்,வண்டலூர், வேளச்சேரி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10.4 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரியில் 8.2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

Also Read: சென்னையில் இன்று மின்தடை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?

வானிலை மையம் சொல்வது என்ன?

இன்று முதல் 21ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22,23ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

17.06.2024 முதல் 21.06.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

17.06.2024: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.06.2024 மற்றும் 19.06.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20.06.2024: தெற்கு – மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.06.2024: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Also Read: ரீ என்ட்ரியா? சசிகலாவுக்கு Exit-யே கொடுத்தாச்சு” ஜெயக்குமார் விமர்சனம்!

 

Latest News