5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Murder: மூளையை வறுத்து சாப்பிட்ட சைக்கோ கொலையாளி.. பெண் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் வாக்குமூலம்.. கலங்கிய போலீஸ்!

துரைப்பாக்கம் கொலை: சென்னை துரைப்பாகத்தில் இளம்பெண் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையை நடத்திய மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்படும் விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Chennai Murder: மூளையை வறுத்து சாப்பிட்ட சைக்கோ கொலையாளி.. பெண் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் வாக்குமூலம்.. கலங்கிய போலீஸ்!
கொலை செய்யப்பட்ட பெண்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Sep 2024 15:32 PM

சென்னை துரைப்பாகத்தில் இளம்பெண் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையை நடத்திய மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்தப்படும் விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. என்ன கொடூரம் என்றால் கொலை செய்யப்பட்ட பெண் தீபாவின் மூளையை தனியாக எடுத்து கடாயில் வறுத்து சாப்பிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதை கேட்ட  காவல்துறை அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளது.  மேலும் சில அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் மணிகண்டன் கூறியுள்ளார். அதன்படி, பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்த தீபாவை கொலை செய்த பிறகு வெங்காயம், தக்காளி, கடுகு, சீரகம் உள்ளிட்டவை போட்டு வறுத்து சமைத்து ருசித்து சாப்பிட்டதாக திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

திடுக் வாக்குமூலம்:

மேலும், சொந்த ஊருக்கு சென்ற அக்கா மற்றும் தாய் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டில் மணிகண்டன் கூலாக படுத்துக் கிடந்ததாகவும், ஏன் வேலைக்கு செல்லாமல் படுத்து கிடக்கிறாய் என அவரது தாய் கேட்டதற்கு தலைவலி என்று கூறியிருக்கிறார். பிறகு தாய் சமைத்தத உப்புமாவை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார் மணிகண்டன்.

பின்னர், போலீசார் வந்து மணிகண்டனை கைது செய்த பிறகுதான் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன. இவருக்கு வயது 26. இவர் பி.இ.மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

Also Read: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

கடந்த ஒன்றரை ஆண்டாக தனது தாயுடன் துரைப்பாக்கத்தில் அக்கா வீட்டில் தங்கியிருந்து பெருக்குடியில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அடிக்கடி பெண்களை அழைத்து நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

கொலையாளி சிக்கியது எப்படி?

இந்த நிலையில் தான் கடந்த 17ஆம் தேதி புரோக்கர் மூலம் ஒருநாளைக்கு ரூ.18,000 என பேசி மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகாத தீபா (30) என்பவரை துரைப்பாக்கத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த நேரத்தில் மணிகண்டனின் அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்தனர்.

இதனை அடுத்து மணிகண்டனன் பேசிய பணத்தை தீபாவுக்கு கொடுக்காமல் ரூ.6,000 கழித்து கொண்டு ரூ.12,000 மட்டுமே கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் தீபாவுக்கும் மணிகண்டனுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. போதையில் இருந்த மணிகண்டன் ரூ.12,000 கொடுத்துவிடு என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் மணிகண்டன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தீபாவின் தலையில் அடித்துள்ளார்.  இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே தீபா இறந்துள்ளார். உடலை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று யோசித்துள்ளார். பிறகு நேற்று முன்தினம் காலையில் துரைப்பாக்கம் பகுதியில் ஒரு சூட்கேஸை வாங்கி உள்ளார்.

அதிர்ந்த போலீஸ்:

அதை வீட்டிற்கு எடுத்து சென்று கொலை செய்யப்பட்ட தீபாவின் இடுப்பு மற்றும் கால் எலும்புகளை தனியாக வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளார். நேற்று அதிகாலை யாருக்கு தெரியாமல் தனது அக்கா வீட்டில் இருந்து 2 தெரு தள்ள உள்ள புதிததாக கட்டுமான பணிகள் நடந்து வரும் வீட்டின் முன் வீசிவிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் ரத்தம் வடிந்தப்படி சூட்கேஸ் ஒன்று கிடப்பதாகவும், அதில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் மக்கள் காலையிலேயே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read: ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!

இதன் அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்மமான சூட்கேஸை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் உடல் பாகங்களை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இப்படிதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்ணின் உடலை கைப்பற்றிய 5 மணி நேரத்திற்குள் போலீசார் கொலை செய்த நபரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News