Traffic Diversion: வாகன ஓட்டிகளே! – சென்னை அடையாறில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்! - Tamil News | Chennai Traffic Police announced traffic diversion in Adyar Junction due to metro work | TV9 Tamil

Traffic Diversion: வாகன ஓட்டிகளே! – சென்னை அடையாறில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!

Published: 

25 Oct 2024 07:40 AM

Chennai: சென்னை பல்வேறு இடங்களிலும் மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒரு வழிசாலையாக இருந்த அடையார் மேம்பாலம் இரு வழி சாலையாக மாற்றப்படுகிறது. திரு.வி.க., பாலத்தில் இருந்து அடையாறு திருவான்மியூர் பெசன்ட் நகர் ஓஎம்ஆர் மற்றும் மத்திய கைலாஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வழக்கம்போல் செல்லலாம்.

1 / 6சென்னை

சென்னை பல்வேறு இடங்களிலும் மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் உள்ளது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாடஹ் வகையில் போக்குவரத்து காவல்துறையினர், மெட்ரோ பணியாளர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர்.

2 / 6

இப்படியான நிலையில் மெட்ரோ பணிகள் காரணமாக அடையாறு சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் சோதனை அடிப்படையில் இந்த போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

3 / 6

அதன்படி சர்தார் வல்லபாய் படேல் சாலையிலிருந்து கிரீன்வேஸ் சாலை, மயிலாப்பூர்,மெரினா கடற்கரை நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு பஸ் டிப்போ சந்திப்பில் உள்ள காந்திநகர் இரண்டாவது குறுக்கு தெரு வழியாக சென்று ராமச்சந்திரா ஆதித்தனார் சாலையில் வலது புறம் திரும்பி தேஸ்முக் துர்காபாய் சாலையை அடையலாம். பின்னர் இடது புறமாக திரும்பி திரு.வி.க., பாலம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4 / 6

ஒரு வழிசாலையாக இருந்த அடையார் மேம்பாலம் இரு வழி சாலையாக மாற்றப்படுகிறது. திரு.வி.க., பாலத்தில் இருந்து அடையாறு திருவான்மியூர் பெசன்ட் நகர் ஓஎம்ஆர் மற்றும் மத்திய கைலாஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வழக்கம்போல் செல்லலாம்.

5 / 6

சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து எல்பி சாலை வழியாக அடையார், திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் செல்லும் வாகனங்களுக்கும் எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை என்பதால் வழக்கம் போல் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 / 6

அதேபோல் எல்பி சாலை வழியாக கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை,மயிலாப்பூர், கிண்டி நோக்கி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் பெசன்ட் நகரிலிருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை, மயிலாப்பூர் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் எந்தவித போக்குவரத்து மற்றும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் குடிக்க வேண்டிய 5 முக்கியமான தருணங்கள்..!
தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?