5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

12 வயது சிறுவனை கடித்து குதறிய ராட்வைலர் நாய்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்!

மிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் நாய் கடியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமியை நாய் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாய் கடி சம்பவங்கள் சென்னையில் அரங்கேறியுள்ளது. இப்படியான சூழலில், சென்னை மற்றொரு நாய் கடி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, தெருவில் நடந்த சென்ற 12 வயது சிறுவனை 2 வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுவனை கடித்து குதறிய ராட்வைலர் நாய்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்!
நாய்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jun 2024 10:23 AM

சென்னையில் மீண்டும் கொடூரம்: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் நாய் கடியால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமியை நாய் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாய் கடி சம்பவங்கள் சென்னையில் அரங்கேறியுள்ளது. இதனால், வெறித்தனமான நாய்களை வளர்க்க வேண்டாம் என மாநகராட்சி உத்தரவிட்டது. இப்படியான சூழலில், சென்னை மற்றொரு நாய் கடி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, தெருவில் நடந்த சென்ற 12 வயது சிறுவனை 2 வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த சிறுவனக்கு முகம், கை, கால் என பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Also Read: குமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!

12 வயது சிறுவனை கடித்து குதறிய 2 நாய்கள்

சென்னை புழல் லட்சுமிபுரம் காலணியை சேர்ந்தவர் ஜோசுவா டேனியல். இவரது மகன் கிளியோபஸ் ஜெரால்டு (12). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் வீட்டில் அருகே உள்ளவர்கள் ராட்வைலர் மற்றும் பாக்ஸர் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை சிறுவன் வீட்டில் இருந்து வெளியே வந்தான். அப்போது, பக்கத்து வீட்டில் இருக்கும் இரண்டு நாய்கள் வெளியே நின்றுக் கொண்டிருந்தது. அப்போது, சிறுவனை பார்த்து 2 நாய்கள் குரைத்துள்ளது.

இதனை அடுத்து, சிறுவன் மீது இரண்டு நாய்களும் பாய்ந்த கடித்து குதறி இருக்கிறது. சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அவரது தந்தை, சிறுவனை கடித்து கொண்டிருந்த இரண்டு நாய்களையும் விரட்டி அடித்தார். நாய் கடித்ததால் சிறுவனின் முகம், கை, கால், மார்பு என பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தந்தை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசில் புகார்:

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய் உரிமையாளர்களிடம் விசாரித்து வருகின்றனர். 12 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும், விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு, இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும். விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும் எனவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், நாய் உரிமையாளர்கள் நாய்களை முறையாக கவனிக்கமால் அலட்சியமாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது.

Also Read: நாளை 14 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம்!

Latest News