5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: 7 வயது மகளை கொடூரமாக கொலை செய்த தாய்… அதிர்ச்சி வாக்குமூலம்!

கடன் கொடுத்தவர்களை திசை திருப்ப பெற்ற மகளே தாய் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தாய் சத்யா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரினடம் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Crime: 7 வயது மகளை கொடூரமாக கொலை செய்த தாய்… அதிர்ச்சி வாக்குமூலம்!
கைதான பெண்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Aug 2024 22:45 PM

7 வயது குழந்தை கொலை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்ற மகளை கிணற்றில் தள்ளி தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் நடத்தப்படும் குற்றச் செயல்கள் பெரும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில் தெரிந்த நபர்கள் அல்லது உறவினர்களே இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. கூறியிருக்கிறது. இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் பெற்றோர்களே அவரது குழந்தைகளை கொல்வதுதான். அந்த வகையில், நம் தமிழகத்திலேயே ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா (30). இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இதில் கடைசி குழந்தையான அதிசயாவுக்கு வயது 7 ஆகுகிறது. இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் 2ஆம் தேதி படித்து வந்தார். 7 வயது சிறுமியான அதிசயா நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அதிசயாவின் தந்தை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது திடீரென அதிசயாவை காணவில்லை. இதனால் அவர் சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறுமி அதிசயாவை அவரது தாய் சத்யா அழைத்து சென்றது பதிவாகி உள்ளது.

பகீர் காரணம்:

அவரினடம் போலீசார் விசாரணை நடந்த முடிவு செய்த நிலையில், அவர் தலைமறைவானார். இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அதிசயா உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து, சத்யா காவல்நிலையத்தில் சரண் அடைந்து அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தார். அதன்படி, சத்யா ரூ.1.40 லட்சம் வட்டிக்கு வாங்கி குடும்ப செலவுகளை பார்த்து வந்துள்ளார்.

இவரால் வட்டி கொடுக்க முடியாத நிலையில், கடனை அடைக்க உறவினர்களின் பணம் கேட்டும் கிடைக்காததாகவும் கூறினார். மேலும், பணம் கொடுக்காததால் சத்யாவுக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் நாம் சோகத்தில் இருக்கும்போது யாரும் பணம் கேட்க மாட்டார்கள் என முடிவு செய்த சத்யா, அதற்காக அவரது மகள் அதிசயாவை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Latest News