5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை… தொடர்ந்து அழுததால் ஆத்திரம்!

5 மாத குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த பிரேம். இவரது ரம்யா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் பிரேம் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தளளார். இந்த தம்பதிக்கு தற்போது 5 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது.

Crime: 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை… தொடர்ந்து அழுததால் ஆத்திரம்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 Jul 2024 07:13 AM

5 மாத குழந்தையை கொன்ற தந்தை: 5 மாத குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் தந்தை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த பிரேம். இவரது ரம்யா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் பிரேம் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தளளார். இந்த தம்பதிக்கு தற்போது 5 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்த நிலையில், வழக்கம்போல் பிரேம் வேலைக்கு சென்றிருக்கிறார். அப்போது, வீட்டில ரம்யா மட்டும் இருந்திருக்கிறார். அப்போது, குழந்தை நீண்ட நேரமாக எந்த சத்தமும், அழுகையில் இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால், சந்தேகம் அடைந்த ரம்யா, குழந்தையை எழுப்ப முயற்சி செய்தார். இருப்பினும், குழந்தை எழாமல் இருந்துள்ளது. இதனால், உடனே குழந்தையை ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Also Read: தமிழ்நாட்டின் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம் .. விவரங்கள் இதோ..

தொடர்ந்து அழுததால் ஆத்திரம்:

இதனை கேட்ட குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் அழுதுள்ளனர். குழந்தையின் கண்ணங்கள் வழக்கத்திற்கு மாறாக சிவந்து காணப்பட்டதை மருத்துவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தந்தை பிரேம் குழந்தையின் கண்ணங்களில் தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக குழந்தை இறந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, தந்தை பிரேமை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “குழந்தையின் அழுகை சத்தம் தாங்க முடியாததால் தந்தை பிரேம் குழந்தையை அடித்திருக்கிறார். தாய் ரம்யா துணி துவைப்பதற்காக நேற்று வெளியில் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் ரத்து குழாயில் சேதம் ஏற்பட்டு ரத்தம் உறைந்திருக்கிறது. இதனால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். எனவே, பிரேம் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Also Read: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த எரியா?