5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. எந்தெந்த ரயில்? நோட் பண்ணிகோங்க..

விரைவு ரயில், வந்தே பாரத், எக்ஸ்பிரஸ் ரயில் என பல வசதிகளை வழங்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போக உள்ளூரில் பயணம் மேற்கொள்ள மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் இடையூறின்றி பயணம் மேற்கொள்ள, அவ்வப்போது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கத்திற்காக தனி வழித்தடம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. எந்தெந்த ரயில்? நோட் பண்ணிகோங்க..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 19 Sep 2024 09:33 AM

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பயணிகள் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். ரயில்வே துறை தரப்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. விரைவு ரயில், வந்தே பாரத், எக்ஸ்பிரஸ் ரயில் என பல வசதிகளை வழங்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போக உள்ளூரில் பயணம் மேற்கொள்ள மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் இடையூறின்றி பயணம் மேற்கொள்ள, அவ்வப்போது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கத்திற்காக தனி வழித்தடம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் கடந்த மாதம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க: சென்னையில் திடீர் மழை.. இந்தியா – வங்கதேச இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா..?

தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயணிகள் ரயில் இயக்கப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில்,

  • புதுச்சேரியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16116) வரும் 23, 27 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
  • புதுச்சேரியில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வரும் ரெயில் (06738) வரும் 27 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக, விழுப்புரத்தில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் ரெயில் (06737) வரும் 27. அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
  • காரைக்காலில் இருந்து வரும் 11, 13, 15, 18, 20 முதல் 22,24 முதல் 29 ஆகிய தேதிகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06739). அதற்கு மாற்றாக திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
  • காரைக்காலில் இருந்து வரும் 10 ஆ,ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, 17 முதல் 22, 24 முதல் 29 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் ரெயில் (06457), அதற்கு மாற்றாக திருவாரூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
  • விழுப்புரத்தில் இருந்து வரும் 23, 25 அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06891). அதற்கு மாற்றாக விருத்தாசலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
  • விழுப்புரத்தில் இருந்து வரும் 23, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 5.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் ரெயில் (06028), அதற்கு மாற்றாக விக்கிரவாண்டியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.
  • விழுப்புரத்தில் இருந்த வரும் 23, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16854), அதற்கு மாற்றாக வெங்கடேசபுரத்தில் இருந்து அதே நேரத்தில் புறப்பட்டு திருப்பதி செல்லும்.
  • விழுப்புரத்தில் இருந்து வரும் 25, 27 அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் (06689), அதற்கு மாற்றாக திருத்துறையூரில் இருந்து காலை 6.19 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.
  • மயிலாடுதுறையிலிருந்து வரும் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மதியம் 12 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16847). அதற்கு மாற்றாக குற்றாலத்தில் இருந்து மதியம் 12.13 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
  • காரைக்காலில் இருந்து வரும் 10,12,14,17,19 ஆகிய தேதிகளில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் ரெயில் (06739), அதற்கு மாற்றாக தஞ்சாவூரில் இருந்து மாலை 5.32 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
  • சென்னை எழும்பூரில் இருந்து வரும் 25, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக, மதுரையிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) அதற்கு மாற்றாக மதுரையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.
  • திருச்சியிலிருந்து வரும் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676). அதற்கு மாற்றாக திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும்.
  • திருச்செந்தூரில் இருந்து வரும் 22, 24, 26, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரெயில் (20606), அதற்கு மாற்றாக திருச்செந்தூரில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
  • நாகர்கோவிலில் இருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06012). அதற்கு மாற்றாக நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும்.
  • விழுப்புரத்தில் இருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (0431). அதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Latest News